வகுப்பு 8 சஅ ப3 பொது மற்றும் தனியார் துறைகள் பாடப்புத்தக வினா-விடைகள்

 


பொது மற்றும் தனியார் துறைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. இந்தியாவில் பொதுத்துறைகளின் தோற்றத்திற்கு காரணமாக இந்திய அரசின் தொழில் கொள்கையின் தீர்மானம் ……………………… ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது

அ)1957

ஆ)1958

இ)1966

ஈ)1956

விடை :ஈ)1956

2. கலப்புப் பொருளாதார நன்மைகளின் கலவை என்பது

அ)முதலாளித்துவம்

ஆ)சமதர்மம்

இ)அ மற்றும் ஆ சரி

ஈ)அ மற்றும் ஆ தவறு

விடை : இ)அ மற்றும் ஆ சரி

3. …………………… நிறுவனச் சட்டம் மற்றும் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் முதன்மையான முக்கிய பங்குதாரர்

அ)தனியார் துறை

ஆ)கூட்டு துறை

இ)பொதுத்துறை

ஈ)இவற்றில் எதுவுமில்லை

விடை : இ)பொதுத்துறை

4. பொதுத்துறை ……………… உடையது

அ)இலாப நோக்கம்

ஆ)சேவை நோக்கம்

இ)ஊக வணிக நோக்கம்

ஈ)இவற்றில் எதுவுமில்லை

விடை : சேவை நோக்கம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. _____________ மற்றும் _____________ ஆகியவை சமூகத்தின் அனைத்து பிரிவினரின் பொருளாதார நலனை மேம்படுத்துவதில் அந்தந்த பணிகளை மேற்கொள்வதில் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது

விடை :பொதுத்துறை மற்றும் தனியார் துறை

2. தனியார் துறை _____________ நோக்கத்தில் செயல்படுகிறது

விடை : இலாப

3.  _____________ என்பது ஒரு சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் செயல்முறையாகும்

விடை : சமூக பொருளாதார மேம்பாடு

4. தனியார் துறையின் முக்கிய செயல்பாடுகளை தோற்றுவிப்பது _____________ மற்றும் _____________ ஆகும்

விடை : புதுமை மற்றும் நவீனமாதல்

5. குடிமக்கள் மத்தியில் _____________ மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது

விடை : சமூக பொருளாதார மேம்பாடு

III.பொருத்துக


மதியுரையகக் குழு

நிதி ஆயோக்

வேளாண்மை

முதன்மை துறை

தொழில்கள்

இரண்டாம் துறை

GDP

மொத்த உள்நாட்டு உற்பத்தி

BHEL

.நவரத்னா தாெழில்


IV பொருத்தமற்றவற்றைக் கூறுக

1. சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை அளவிட பின்வருவனற்றில் எந்தக் குறியீடு பயன்படுத்தப்படுவதில்லை

அ)கருப்புப்பணம்

ஆ)ஆயுட்காலம்

இ)மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)

ஈ)வேலைவாய்ப்பு

விடை : அ)கருப்புபணம்

V. பின்வருவனற்றுள் எது சரியான விடை

i. அரசுக்கு மட்டுமே சொந்தமான தொழில்கள் அட்டவணை – A என குறிப்பிடப்படுகின்றன

ii. தனியார் துறையானது மாநில துறையின் முயற்சிக்கு துணை புரியக் கூடிய தொழில்கள் புதிய அலகுகளை தொடங்குவதற்கான முழு பொறுப்பையும் அரசு ஏற்றுக்கொள்வது அட்டவணை – B என குறிப்பிடப்படுகின்றன

iii. தனியார் துறையில் இருந்த மீதமுள்ள தொழில்கள் அட்டவணையில் குறிப்பிடப்படவில்லை

அ)அனைத்தும் சரி

ஆ)i மற்றும் iii சரி

இ)i மற்றும் ii சரி

ஈ)இவற்றில் எதுவும் இல்லை

விடை :இ) i மற்றும் ii சரி


VI. பின்வரும் வினாக்களுக்கு ஒரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

1. பொதுத்துறைகள் குறித்து சிறு குறிப்பு எழுதுக

அரசு, பொதுமக்களுக்கு பண்டங்கள் மற்றம் சேவைகளை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள துறை பொதுத்துறை ஆகும். இவை மத்திய அரசு அல்லது மாநில அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது

2. சமுதாய தேவை என்றால் என்ன?

கல்வியறிவு, வேலைவாய்ப்பு, சமூக பொருளாதார மேம்பாடு, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம் ஆகியவை சமுதாய தேவைகளாகும்.

3. பொதுத்துறைகளின் நோக்கங்களை எழுதுக.

  • உட்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் விரைவான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்

  • வளர்ச்சிக்கான நிதி ஆதாரங்களை உருவாக்குதல்

  • வருமானம் மற்றம் செல்வங்களை மறுபகிர்வு செய்வதை ஊக்குவித்தல்

  • வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்

  • சமச்சீர் வட்டார வளர்ச்சியை ஊக்குவித்தல்

  • சிறிய அளவிலான மற்றும் துணைத் தொழில்களின் வளர்ச்சியை ஊக்குவித்தல்

  • ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் இறக்குமதி மாற்றீடை துரிதப்படுத்துதல்

4. பொதுத்துறைகளின் மூன்று உறுப்புகள் யாவை?

  • அரசுத்துறைகளால் நிர்வாகம் செய்யப்படும் நிறுவனங்கள்

  • கூட்டுத்துறை நிறுவனங்கள்

  • பொதுக்கழகம்

5. சமூக பொருளாதார மேம்பாட்டை அளவிடும் சில குறியீடுகளின் பெயர்களைக் கூறுக

  • மொத்த உள்நாட்டு உற்பத்தி GDP

  • ஆயுட்காலம்

  • கல்வியறிவு

  • வேலைவாய்ப்பு 

6. தனியார் துறை குறித்து சிறு குறிப்பு எழுதுக

தனிநபர்கள் அல்லது தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான அவர்களால் கட்டுப்படுத்தப்பட்டு, நிர்வகிக்கப்படும் ஒரு தேசிய பொருளாதாரத்தின் பிரிவு தனியார் துறை என்று அழைக்கப்படுகிறது

7. தனியார் துறை நிறுவனங்களில் ஏதேனும் மூன்றினை கூறுக.

  • ஆதித்யா பிர்லா நிறுவனம்

  • டாட்டா குழும நிறுவனங்கள்

  • விப்ரோ நிறுவனம்


VII. விரிவான விடை தருக

1. பொதுத்துறையின் உறுப்புகள் பற்றி விளக்குக

அரசுத்துறைகளால் நிர்வாகம் செய்யப்படும் நிறுவனங்கள்

ஒரு அரசாங்க துறையின் நிர்வாகம் என்பது பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் பொதுவானதாகும்

எ.கா. தபால் மற்றும் தந்தி, இரயில்வே, துறைமுக அறக்கட்டளை

கூட்டுத்துறை நிறுவனங்கள்

ஒரு நிறுவன சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் அரசாங்கம் ஒரு பிரதான பங்குதாரராக இருந்து கட்டுப்படுத்துகிறது

எ.கா. இந்தியன் ஆயில் பெட்ரோனாஸ் தனியார் நிறுவனம், இந்தியன் செயற்கை ரப்பர் நிறுவனம்

பொதுக்கழகம்

பொதுக்கழக அமைப்பானது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டத்தினால் பொதுக்கழகத்தினை நிறுவுவதே ஆகும்

எ.கா. ஆயுள் காப்பீட்டு நிறுவனம், ஏர் இந்தியா, இந்திய ரிசர்வ் வங்கி, மின்சார வாரியம்

2. பொதுத்துறையின் வரலாற்றை சுருக்கமாக விளக்குக

  • 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, பலவீனமான தொழில் தளத்தை கொண்ட வேளாண்மையை முதன்மையாக கொண்ட நாடாக இருந்தது..

  • 1948ஆம் ஆண்டு முதல் தொழில்துறை கொள்கை தீர்மானத்தின் அறிவிப்பில் தொழில்துறை வளர்ச்சியின் யுக்திகளை பரந்த வரையறைகளைக் கொண்ட வகுத்தது

  • தொழில்துறை வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்துடன் 1951ஆம் ஆண்டில் தொழில்துறை சட்டம் இயற்றப்பட்டது

  • இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டமும் (1956-60) 1956ம் ஆண்டு தொழில்துறை கொள்கை தீர்மானமும் நேருவின் தேசிய தொழில்மயமாக்கல் கொள்கையை பூர்த்தி செய்ய பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சியை வலியுறுத்தியது

  • 1991 ஆம் ஆண்டின் தொழில் துறை கொள்கை முந்தைய அனைத்துக் கொள்கைகளிலிருந்தும் வேறுபட்டு அன்னிய நேரடி நிறுவனங்கள் முதலீடு செய்ய அனுமதி அளித்தது.

3. சமூக – பொருளாதார மேம்பாட்டினை அளவிடும் குறியீடுகள் ஏதேனும் ஐந்தினை பற்றி விளக்குக.


மொத்த உள்நாட்டு உற்பத்தி

சமூக – பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் மொத்த உள்நாட்டு உற்பத்தி துணைபுரிகிறது

ஆயுட்காலம்

2011 ஆம் ஆண்டு இந்தியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சராசரி ஆயுட்காலம் ஆண்டுக்கு 65.80 ஆண்டுகள் மற்றும் பெண்களுக்கு 68.33 ஆண்டுகள் ஆகும்

கல்வியறிவு

சமூக பொருளாதார வளர்ச்சிக்கு கல்வி திறன் முக்கிய பங்கு வகிக்கிறது

அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் போன்ற திட்டங்களும் கல்வியின் அளவை அதிகரிப்பதற்காக அரசால் வழங்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு

கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்துவதற்காக குறைந்த கட்டணத்தில் மின்சார வரிச்சலுகை போன்ற சலுகைகளை வழங்குவதன் மூலம் பின் தங்கிய பகுதிகளில் தொழில்துறையை தொடங்க தனியார் துறைகளை அரசாங்கம் ஊக்குவிக்கிறது.இது வட்டார ஏற்றத் தாழ்வுகளை நீக்குகிறது.

வீடு சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம் வழங்குதல்

அரசுத்துறையானது வீட்டு வசதிகள், சுத்தமான குடிநீர் வசதிகள் மற்றும் சுகாதார வசதிகளை தூய்மை இந்தியா திட்டதின் கீழ் வழங்குகிறது. இது போன்ற வசதிகளை வழங்குவதால், மக்களின் வாழ்க்கை சுழற்சி அதிகரிக்கிறது.

4. பொதுத்துறையின் முக்கியத்துவம் யாது?

  • பொதுத்துறை மற்றும் மூலதன உருவாக்கம்

    • திட்டமிடல் காலத்தில் சேமித்து, முதலீடு செய்வதில் பொதுத்துறையின் பங்கு மிக முக்கியமானதாக விளங்கியது.

  • பொருளாதார மேம்பாடு

    • பொருளாதார வளர்ச்சி தொழில் துறை வளர்ச்சியைப் பொறுத்தது.

  • சமச்சீரான வட்டார வளர்ச்சி

    • பொதுத்துறை நிறுவனங்கள் தங்களது ஆலைகளை பின் தங்கிய பகுதிகளில் அமைத்து சமச்சீரான வளர்ச்சிக்கு உதவுகிறது.

  • வேலை வாய்ப்பு உருவாக்கம்

    • வேலையின்மை பிரச்சினையைத் தீர்க்க பொதுத்துறை நிறுவனங்கள் பல லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

  • ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் அந்திய செலவாணி வருவாய்

    • சில பொதுத்துறை நிறுவனங்கள் நமது ஏற்றுமதியை மேம்படுத்த அதிக பங்களிப்பு செய்துள்ளது.

  • நலிவடைந்த தொழில்களுக்கு பாதுகாப்பு

    • நலிவடைந்த பிரிவு மூடப்படுவதை தடுத்து பொறுப்பை ஏற்றுக்கொண்டு பாதுகாப்பு வளங்குகின்றது.

  • இறக்குமதி மாற்று

    • எண்ணெய் நிறுவனங்கள், எரிவாயு ஆணையம் போன்றவை இறக்குமதி மாற்றீடு மூலம் அன்னிய செலாவணியை சேமித்துள்ளன.

5. பொதுத்துறைக்கும் தனியார் துறைக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக


பொதுத்துறை

தனியார் துறை

தொழில்களின் உரிமையானது அரசாங்கத்திடம் உள்ளது

தொழில்களின் உரிமையானது தனிநபர்களிடம் உள்ளது

பாெதுத்துறை தொழிலாளர்களக்கு முறையான ஊதியத்தை உறுதி செய்கிறது

தனியார்துறை தொழிலாளர்களை சுரண்டகிறது

வரி ஏய்ப்பு இல்லை

வரி ஏய்ப்பு உண்டு

சேவை நோக்கமுடையது

இலாப நோக்கமுடையது

இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது

இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை


6. தனியார் துறையின் பணிகளைப் பற்றி எழுதுக


  • தனியார் துறையின் முக்கிய செயல்பாடு புதுமை மற்றும் நவீனமயமாதலை உருவாக்குவதாகும். 

  • இலாப நோக்கத்தோடு இயங்க, உற்பத்தியின் புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதற்கும், உற்பத்தி நடவடிக்கைகளை விஞ்ஞான முறையில் நிர்வகிப்பதற்கும் அவர்களை தூண்டுகிறது

  • உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல் இருக்கின்ற வணிகங்களை ஊக்குவித்தல், விரிவுபடுத்துதல்

  • மனித மூலதன வளர்ச்சியை ஊக்குவித்தல் 

  • பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு குறிப்பாக தொழிலாளர் சந்தையில் பங்கேற்க உதவுதல் 

  • சமூக வணிக மற்றம் கூட்டுறவு உள்ளூர் பரிமாற்ற அமைப்புகள் மற்றும் முறைசாரா கடன் போன்றவற்றை ஊக்குவிப்பதன் மூலம் சமூக வளர்ச்சியை ஊக்குவித்தல்

போன்றவை தனியார் துறையின் சில பணிகளாகும்.


Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

8 அறிவியல்- அன்றாட வாழ்வில் வேதியியல்- வினா-விடைகள்