வகுப்பு 6 ப1இ2 தமிழ் வாழ்வியல் திருக்குறள்

 



இயல் இரண்டு 

வாழ்வியல் -திருக்குறள்


திருக்குறள்:

  • திருக்குறள்- அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் இன்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது.

  • 133 அதிகாரங்களில் 1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது.

  • இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

  • திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, வாயுறை வாழ்த்து முதலிய சிறப்புப் பெயர்கள் உள்ளன.

  • நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

  • திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.

  • திருவள்ளுவர்,இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்

  • வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர் முதலிய சிறப்புப் பெயர்கள் உண்டு.


மதிப்பீடு:


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது ---------------------

அ) ஊக்கமின்மை 

ஆ) அறிவுடைய மக்கள் 

இ) வன்சொல் 

ஈ) சிறிய செயல்

விடை: ஆ) அறிவுடைய மக்கள்


2. ஒருவர்க்குச் சிறந்த அணி ------------------

அ) மாலை 

ஆ) காதணி 

இ) இன்சொல் 

ஈ) வன்சொல்

விடை: இ) இன்சொல் 


பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக.

1. இனிய உளவாக இன்னாத கூறல் 

கனியிருப்பக் காய் கவர்ந் தற்று



2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் 

என்பும் உரியர் பிறர்க்கு




நயம் அறிக.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்

இந்தக் குறளில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக


எதுகை:


செற்கரிய - செற்கரிய

செய்வார் - செய்கலா


மோனை:


செயற்கரிய - செயற்கரிய

செய்வார் - செய்கலா


பின்வரும் செய்திக்குப் ப�ொருத்தமான திருக்குறள் எது எனக் கண்டறிந்து எழுதுக.


2016 ஆம் ஆண்டு ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் கலந்துகொண்டார். உயரம் தாண்டுதல் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் பெற்றார். செய்தியாளர்கள் அவருடைய தாயிடம் நேர்காணல் செய்தனர். “என் மகனின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவனைப் பெற்ற பொழுதைவிட இப்போது அதிகமாக மகிழ்கிறேன்” என்று  மகிழ்ச்சியுடன் கூறினார்.


அ) செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்


ஆ) ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்


இ) இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று


விடை:

இ) இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று


குறுவினாக்கள்

1. உயிருள்ள உடல் எது?

அன்பு இருப்பதுதான் உயிருள்ள உடல்.


2. எழுத்துகளுக்குத் தொடக்கமாக அமைவது எது?

அகரமே எழுத்துகளுக்குத் தொடக்கம்.


3. அன்பிலார், அன்புடையார் செயல்கள் யாவை?

அன்பு இல்லாதவர்கள் எல்லாப் பொருளும் தமக்கே என்பார்கள், அன்பு உடையவர்கள் தம் உடம்பும் பிறர்க்கே என்பார்கள்.


Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 சமூக அறிவியல் வினா -விடைகள்