வகுப்பு 8 ப1 சஅ பு1 பாறை மற்றும் மண் வினா-விடைகள்

 

அலகு -1

 பாறை மற்றும் மண்

மதிப்பீடு

I சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. கீழ்க்கண்டவற்றுள் எது பாறைக் கோளம் என அழைக்கப்படுகிறது?

அ) வளிமண்டலம் ஆ) உயிர்க்கோளம் இ) நிலக்கோளம் ஈ) நீர்க்கோளம்

விடை:இ) நிலக்கோளம் 

2. உலக மண் நாளாக கடைபிடிக்கப்படும் நாள்

அ) ஆகஸ்ட் 15 ஆ) ஜனவரி 12 இ) அக்டோபர் 15 ஈ) டிசம்பர் 5

விடை:ஈ) டிசம்பர் 5 

3. உயிரினப் படிமங்கள் ___________பாறைகளில் காணப்படுன்றன.

அ) படிவுப் பாறைகள் ஆ) தீப்பாறைகள் 

இ) உருமாறியப் பாறைகள் ஈ) அடியாழப் பாறைகள்

விடை:அ) படிவுப் பாறைகள் 

 

4. மண்ணின் மேல் நிலை அடுக்கு

அ) கரிம மண் அடுக்கு ஆ) அடி மண் அடுக்கு

இ) அடி மண் ஈ) அடித்தள பாறை

விடை:அ) கரிம மண் அடுக்கு

 

5. பருத்தி வளர ஏற்ற மண்

அ) செம்மண் ஆ) கரிசல் மண்

இ) வண்டல் மண் ஈ) மலை மண்

விடை:ஆ) கரிசல் மண் 

6. மண்ணின் முக்கிய கூறு

அ) பாறைகள் ஆ) கனிமங்கள்

இ) நீர் ஈ) இவை அனைத்தும்

விடை:ஆ) கனிமங்கள் 

7. கீழ்க்கண்டவற்றில் எவ்வகை மண் பரவலாகவும் அதிக வளமுள்ளதாகவும் உள்ளது?

அ) வண்டல் மண் ஆ) கரிசல் மண்

இ) செம்மண் ஈ) மலை மண்

விடை:அ) வண்டல் மண் 

II கோடிட்ட இடங்களை நிரப்புக

1. பாறைகளைப் பற்றிய அறிவியல் சார்ந்த படிப்பு ___________.

விடை: பாறையியல் 

2. ___________மண் தினைப் பயிர்கள் விளைவிப்பதற்கு ஏற்றதாகும்.

விடை: கரிசல் 

3. 'புவியின் தோல்' என்று ___________அழைக்கப்படுகிறது.

விடை: மண் 

4. உருமாறிய பாறைகளின் ஒரு வகையான ___________ பாறை தாஜ்மகால் கட்ட பயன்படுத்தப்பட்டது.

விடை: வெள்ளைப் பளிங்கு

5. ___________பாறை 'முதன்மை பாறை' என்று அழைக்கப்படுகிறது.

விடை: தீப் 

III சரியா / தவறா எனக் குறிப்பிடுக

1. தீப்பாறைகள் முதன்மை பாறைகள் என்று அழைக்கப்படுகிறது.

விடை: சரி 

2. களிமண் பாறையிலிருந்து பலகைக்கல் (Slate) உருவாகிறது.

விடை: சரி

3. செம்மண் சுவருதல் (Leaching) செயல்முறைகளில் உருவாகிறது.

விடை: தவறு 

4. இயற்கை மணலுக்கு மாற்றாக கட்டுமான பணிகளுக்கு “செயற்கை மணல்” (M-Sand) பயன்படுகிறது.

விடை: சரி

5. படிவுப் பாறைகளைச் சுற்றி எரிமலைகள் காணப்படுகின்றன.

விடை: தவறு

IV பொருத்துக


i

கிரானைட்

1.அடிப்பாறை

ii

மண் அடுக்கு

2.அடியாழப் பாறைகள்

iii

பாரன் தீவு

3.பட்டைப் பயிரிடல் வேளாண்மை

iv

மண் வளப்பாதுகாப்பு

4.செயல்படும் எரிமலை


       I    ii   iii   iv 

அ)  2   1   4   3 

ஆ) 2   1   3   4 

இ)  4   3   2   1 

ஈ)   3   4   2   1

விடை: ஆ) 2   1   3   4  


i

பசால்ட் (கருங்கல்)

1.ஆந்த்ரசைட்

ii

சுண்ணாம்புப் பாறை

2.. வெளிப்புற தீப்பாறைகள் 

iii

நிலக்கரி

3.உருமாறியப் பாறைகள்

iv

ஜெனிஸ் (நைஸ்)

4. படிவுப்பாறைகள்

        i  ii   iii   iv 

அ)  2  4   1   3 

ஆ) 2  4   1   3 

இ)  3   1   2   4 

ஈ)   3   1   4   2

விடை:அ)  2  4   1   3  


V கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து தவறான விடையைத் தேர்வு செய்க

1. அ)  தீப்பாறைகள் முதன்மைப் பாறைகள் என்று அழைக்கப்படுகிறது.

ஆ)  பாறைகள் வானிலை சிதைவினால் மண்ணாக உருமாறுகிறது.

இ)  படிவுப் பாறைகள் கடினமான தன்மை கொண்டவை.

ஈ)  தக்காண பீடபூமி பகுதிகள் தீப்பாறைகளால் உருவானவை.

விடை: இ)  படிவுப் பாறைகள் கடினமான தன்மை கொண்டவை.

2. அ)  மண்ணரிப்பு மண் வளத்தை குறைக்கிறது.

ஆ)  இயக்க உருமாற்றம் அதிக வெப்பத்தினால் உருவாகிறது.

இ)  மண் ஒரு புதுப்பிக்கக் கூடிய வளம்.

ஈ)  இலைமக்குகள் மேல் மட்ட மண்ணின் ஒரு பகுதியாகும்.

விடை:ஆ)  இயக்க உருமாற்றம் அதிக வெப்பத்தினால் உருவாகிறது. 

VI கொடுக்கப்பட்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான கூற்றைக் கண்டுபிடித்து  சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

கூற்று 1 -  படிவுப் பாறைகள் பல்வேறு அடுக்குகளைக் கொண்டவை

கூற்று 2 -  படிவுப் பாறைகள் பல்வேறு காலங்களில் உருவானவை.

அ)  கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1 க்கு சரியான விளக்கம்.

ஆ)  கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1 க்கு சரியான விளக்கம் அல்ல.

இ)  கூற்று 1 சரி ஆனால் கூற்று 2 தவறு.

ஈ)  கூற்று 2 சரி ஆனால் கூற்று 1 தவறு.

விடை:அ)  கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1 க்கு சரியான விளக்கம்.

 

VII காரணம் கூறுக

1. நீர்த்தேக்கப் படுகைகளில் இரசாயன படிவுப் பாறைகள் காணப்படுகின்றன.

விடை: 

பாறைகளில் உள்ள கனிமங்கள் நீரில் கரைந்து, இரசாயன கலவையாக மாறுகிறது. இவை ஆவியாதல் மூலமாக உருவாகின்றன. எனவே நீர்த்தேக்கப் படுகைகளில் இரசாயன படிவுப் பாறைகள் காணப்படுகிறது.

2. தீப்பாறைகள் எரிமலை பகுதிகளில் காணப்படுகிறது.

விடை: 

தீப்பாறைகள் புவியின் ஆழமானப் பகுதியிலிருந்து வெளியேறும் உருகிய பாறைக் குழம்பு (Magma) உறைந்து உருவானதாகும். எனவே இவை எரிமலை பகுதிகளில் காணப்படுகிறது.


VIII வேறுபடுத்துக

1. உருமாறிய பாறைகள் மற்றும் படிவுப்பாறைகள்

உருமாறிய பாறைகள்

படிவுப்பாறைகள்

அதிகவெப்ப அழுத்தம் காரணமாக தீப்பாறைகளும் படிவுப்பாறைகளும் மாற்றமடைந்து உருமாறிய பாறைகள் என பெயர் பெறுகிறது.

அரிப்பு காரணிகளால் அரிக்கப்பட்டு (காற்று, நீர், பனியாறுகள்) படிய வைக்கப்பட்ட படிவுகள் நீண்ட காலமாக அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக இறுகியதால் படிவுப் பாறைகள் உருவாகின்றன.

உருமாறியப் பாறைகள் பெரும்பாலும் படிக தன்மைக் கொண்டவை.

இப்பாறைகள் பல அடுக்குகளைக் கொண்டது. 

உருமாறிய பாறைகளின் பல்வேறு பட்டைகள் ஒரு பகுதி வெளிர் நிற கனிமங்களை கொண்டதாகவும், மற்றொரு பகுதி கருமை நிறகனிமங்களை கொண்டதாகவும் உள்ளன. 

இப்பாறைகளில் உயிரின படிமங்கள் (Fossil) உள்ளன. இப்பாறைகள் மென் தன்மையுடையதால் எளிதில் அரிப்புக்கு உட்படுகின்றன.


2. மண் வள பாதுகாப்பு மற்றும் மண்ணரிப்பு.

மண் வளப்பாதுகாப்பு

மண்ணரிப்பு

மண் வளப்பாதுகாப்பு என்பது மண் அரிப்பிலிருந்து பாதுகாத்து மண் வளத்தை மேம்படுத்தும் செயல்முறையாகும். 

மண்ணரிப்பு என்பது இயற்கை காரணிகள் மற்றும் மனித செயல்பாடுகளினால் மண்ணின் மேலடுக்கு நீக்கப்படுதல் அல்லது அரிக்கப்படுதல் ஆகும். 

காடுகள் வளர்த்தல், மேய்ச்சலை கட்டுப்படுத்துதல், அணைகளைக் கட்டுதல், பயிற்சுழற்சி முறை, பட்டை முறை வேளாண்மை போன்ற முறைகளைக் கொண்டு மண் வளத்தை பாதுகாக்கலாம்.


மண்ணரிப்பு மண்ணின் வளத்தை குறைத்து வேளாண்மை உற்பத்தியைக் குறைக்கிறது. ஓடும் நீர் மற்றும் காற்று மண்ணரிப்புக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. 


IX சுருக்கமாக விடையளி

1. தீப்பாறைகள் எவ்வாறு உருவாகின்றன?

தீப்பாறைகள் புவியின் ஆழமானப் பகுதியிலிருந்து வெளியேறும் உருகிய பாறைக் குழம்பு உறைந்து உருவாவதாகும். இப்பாறைகளிலிருந்து மற்ற பாறைகள் உருவாகின்றதால் இவற்றை முதன்மைப் பாறைகள் அல்லது தாய்ப் பாறைகள் என்று அழைக்கிறோம்.

2. பாறைகளின் கூட்டமைப்பு பற்றி விவரி.

பாறைகள், ஒன்று அல்லது பல கனிமப்பொருட்களால் ஆனவை. புவி முழுவதும் 8 அடிப்படை கனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கனிமங்கள் வேதி மூலங்களின் தொகுதிகளால் ஆனவை. பாறைகள் என்பது கனிமங்கள் தனித்த கூறுகளாகவோ அல்லது கூட்டுக்கலவையாகவோ உருவாகலாம்.

3. 'பாறைகள்'வரையறு.

பாறைகள் என்பது திட கனிம பொருட்களால் புவியின் மேற்பரப்பில் மற்ற கோள்களில் உள்ளது போல் உருவானதாகும். புவியின் மேல�ோடு (நிலக்கோளம்- Lithosphere) பாறைகளால் உருவானது.

4. மண்ணின் வகைகளைக் கூறுக.

மண் ஆறு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. 

அவை, 1. வண்டல் மண் 2. கரிசல் மண் 3. செம்மண் 4. சரளை மண் 5. மலை மண் 6. பாலை மண்.

5. மண்வளப் பாதுகாப்பு என்றால் என்ன?

மண் வளப்பாதுகாப்பு என்பது மண் அரிப்பிலிருந்து பாதுகாத்து மண் வளத்தை மேம்படுத்தும் செயல்முறையாகும்.

X விரிவான விடையளி

1. மண் உருவாக்கச் செயல் முறைகள் பற்றி விவரி.

  • மண் என்பது பல்வகை கரிமப்பொருள்கள், கனிமங்கள், வாயுக்கள், திரவப் பொருள்கள் மற்றும் பல உயிரினங்கள் கலந்த கலவையாகும். 

  • இது உயிரினங்கள் வாழ துணைபுரிகிறது. மண்ணில் உள்ள கனிமங்கள் மண்ணை உருவாக்கும் ஒரு அடிப்படை காரணியாகும். 

  • புவிபரப்பின் மேல் மண் உருவாவதால் இது “புவியின் தோல்” என்று அழைக்கப்படுகிறது. பாறைகள், வானிலை சிதைவு மற்றும் அரித்தல் செயல்முறைகளுக்கு உட்படுத்தபடும்பொழுது மண்ணாக உருவாகிறது. 

  • நீர், காற்று, வெப்ப நிலைமாறுபாடு, புவி ஈர்ப்பு விசை, வேதிபரிமாற்றம், உயிரினங்கள் மற்றும் அழுத்த வேறுபாடுகளால் தாய்ப்பாறைகள் சிதைவுறுகின்றன. 

  • தாய்ப்பாறையை தளர்ந்த பாறைகளாக மண் மாற்றுகின்றன. காலப்போக்கில் இப்பாறைகள் உடைபட்டு மிருதுவான துகள்களாக மாறுகிறது. இந்தச் செயல்முறைகள் பாறைத் துகள்களிலிருந்து தாதுக்கள் வெளிப்படக் காரணமாகின்றன. 

2. பாறைகளை வகைப்படுத்தி விவரிக்கவும்.

புவி பரப்பில் காணப்படும் பாறைகளை, அவை தோன்றும் முறைகளின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். 

(1) தீப்பாறைகள் 

(2) படிவுப் பாறைகள்

(3) உருமாறியப் பாறைகள் அல்லது மாற்றுருப் பாறைகள் 

தீப்பாறைகள் 

தீப்பாறைகள் புவியின் ஆழமானப் பகுதியிலிருந்து வெளியேறும் உருகிய பாறைக் குழம்பு (Magma) உறைந்து உருவானதாகும். 

தீப்பாறைகளின் பண்புகள் 

1. இந்தப் பாறைகள் கடினத் தன்மை உடையவை. 

2. இவை நீர்புகாத் தன்மைக் கொண்டவை. 

3. உயிரினப் படிமப்பொருள்கள் (Fossils) இப்பாறைகளில் இருக்காது.

தீப்பாறைகளின் வகைகள் 

தீப்பாறைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவை: 1. வெளிப்புறத் தீப்பாறைகள் (Extrusive Igneous Rocks) 2. ஊடுருவிய தீப்பாறைகள் (Intrusive Igneous Rocks)

படிவுப் பாறைகள்

படிவுப் பாறைகள் அரிப்பு காரணிகளால் அரிக்கப்பட்டு (காற்று, நீர், பனியாறுகள்) படிய வைக்கப்பட்ட படிவுகள் நீண்ட காலமாக அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக இறுகியதால் படிவுப் பாறைகள் உருவாகின்றன. 

படிவுப்பாறைகளின் பண்புகள் 

1. இப்பாறைகள் பல அடுக்குகளைக் கொண்டது. 

2. இப்பாறைகள் படிகங்களற்ற பாறைகளாக உள்ளது. 

3. இப்பாறைகளில் உயிரின படிமங்கள் (Fossil) உள்ளன.

உருமாறிய பாறைகள்

அதிகவெப்ப அழுத்தம் காரணமாக தீப்பாறைகளும் படிவுப்பாறைகளும் மாற்றமடைந்து உருமாறிய பாறைகள் என பெயர் பெறுகிறது. 

உருமாறிய பாறைகள் இரண்டு வகைப்படும். அவை: 

1. வெப்ப உருமாற்றம் (Thermal Metamorphism) 

2. இயக்க உருமாற்றம் (Dynamic Metamorphism)

உருமாறிய பாறைகளின் பண்புகள் 

1. உருமாறியப் பாறைகள் பெரும்பாலும் படிக தன்மைக் கொண்டவை. 

2. உருமாறிய பாறைகளின் பல்வேறு பட்டைகள் ஒரு பகுதி வெளிர் நிற கனிமங்களை கொண்டதாகவும், மற்றொரு பகுதி கருமை நிறகனிமங்களை கொண்டதாகவும் உள்ளன. 

3. மண்ணடுக்குகள் பற்றி விவரிக்கவும்.

மண்ணின் அடுக்கு 

O – இலை மக்கு அடுக்கு இந்த அடுக்கு கரிமப் பொருட்களால் உருவானவை 

A - மேல்மட்ட அடுக்கு கரிம மற்றும் கனிமப் பொருட்களால் ஆன அடுக்கு 

E – உயர்மட்ட அடுக்கு இவ்வடுக்கு உயர்மட்ட அடுக்காகும். அதிக அளவு சுவர்தலுக்கு, உட்பட்ட அடுக்கு, களிமண், இரும்பு மற்றும் அலுமினிய ஆக்ஸைடு போன்றதாதுக்கள் இவ்வடுக்கில்கனிசமாககாணப்படுகின்றன. 

B - அடி மண் இவ்வடுக்கு தாய்பாறையின் இரசாயன, (அ) பௌதீக மாற்றத்திற்கு உட்பட்டவை. இரும்பு, களிமண், அலுமினிய ஆக்ஸைடு மற்றும் கனிமப் பொருட்களால் தோன்றிய அடுக்கு அல்லது திரள் மண்டலம் என அழைக்கப்படுகிறது 

C - தாய்பாறை அடுக்கு இவ்வடுக்கில் தாய்ப்பாறைகள் குறைந்த அளவே சிதைக்கப்படுகின்றன. 

R - சிதைவடையாத தாய்ப்பாறை இவ்வடுக்கு சிதைவடையாத அடிமட்ட பாறையாகும்.

4. மண்ணினை வகைப்படுத்தி விவரிக்கவும்.

மண் உருவாகும் விதம், அவற்றின் நிறம் பௌதீக மற்றும் இரசாயன பண்புகளின் அடிப்படையில் ஆறு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. 

1. வண்டல் மண் 

வண்டல் மண் ஆற்றுச் சமவெளிகள், வெள்ளச் சமவெளிகள், கடற்கரைச் சமவெளிகளில் காணப்படுகிறது. இவை ஓடும் நீரின் மூலம் கடத்தப்படும் நுண்ணிய துகள்களால் படிய வைக்கப்பட்டு உருவாகிறது. இது மற்ற மண் வகைகளைக் காட்டிலும் வளம்மிக்கது. இது நெல், கரும்பு, கோதுமை, சணல் மற்றும் மற்ற உணவுப் பயிர்கள் பயிரிட ஏற்றது.

2. கரிசல் மண் 

கரிசல் மண், தீப்பாறைகள் சிதைவடைவதால் உருவாகின்றன. கரிசல் மண் இயற்கையிலேயே களிமண் தன்மையையும், ஈரப்பதத்தையும் தக்க வைத்துக் கொள்ளும் திறன் கொண்டது. கரிசல் மண்ணில் பருத்திப் பயிர் நன்கு வளரும். 

3. செம்மண் 

செம்மண், உருமாறியப் பாறைகள் மற்றும் படிகப் பாறைகள் ஆகியவை சிதைவடைவதால் உருவாகிறது. இம்மண்ணில் உள்ள இரும்பு ஆக்சைடு அளவைப் பொருத்து மண்ணின் நிறமானது பழுப்பு முதல் சிகப்பு நிறம் வரை வேறுபடுகிறது இம்மண் பொதுவாக அரை வறண்ட பிரதேசங்களில் காணப்படுகிறது. இது வளம் குறைந்த மண்ணாக இருப்பதால் தினைப் பயிர்கள் பயிரிட ஏற்றது. 

4. சரளை மண் 

சரளை மண் அயனமண்டல பிரதேச காலநிலையில் உருவாகிறது. இம்மண் அதிக வெப்பநிலை மற்றும் அதிக மழைப்பொழிவு கொண்ட பகுதிகளில் சுவருதலின் (Leaching) செயலாக்கத்தினால் உருவாவதால் இம்மண் வளம் குறைந்து காணப்படுகிறது. இது தேயிலை, காப்பி போன்ற தோட்டப் பயிர்கள் பயிரிட ஏற்றது.

5. மலை மண் 

மலைமண், மலைச்சரிவுகளில் காணப்படுகிறது. இப்பகுதிகளில் கார தன்மையுடன் குறைந்த பருமன் கொண்ட அடுக்காக உள்ளது. உயரத்திற்கு ஏற்றவாறு இம்மண்ணின் பண்புகள் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றன. 

6. பாலை மண் 

பாலை மண் அயன மண்டல பாலைவனப் பிரதேசங்களில் காணப்படுகிறது. இது உவர்தன்மை, மற்றும் நுண்துளைகளைக் கொண்டது. வளம் குறைந்த இம்மண்ணில் வேளாண்மையை மேற்கொள்ள இயலாது.


Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

8 அறிவியல்- அன்றாட வாழ்வில் வேதியியல்- வினா-விடைகள்