வகுப்பு 8 ப1 அ2 சமூக அறிவியல் வர்த்தகத்திலிருந்து பேரரசுவரை வினா விடைகள்

 

அலகு 2

 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை 

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. 1757ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்

அ) சுஜா-உத்– தெளலா

ஆ) சிராஜ்- உத் – தெளலா

இ) மீர்காசிம்

ஈ) திப்பு சுல்தான

விடை : ஆ) சிராஜ்- உத் – தெளலா


2. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு

அ) 1757 ஆ) 1764 இ) 1765 ஈ) 1775

விடை : அ) 1757


3. பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை

அ) அலகாபாத் உடன்படிக்கை

ஆ) கர்நாடக உடன்படிக்கை

இ) அலிநகர் உடன்படிக்கை

ஈ) பாரிசு உடன்படிக்க

விடை : அ) அலகாபாத் உடன்படிக்கை


4. பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி ____________ கர்நாடக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

அ) முதல் ஆ) இரண்டாம் இ) மூன்றாம் ஈ) ஏதுமில்லை

விடை : ஆ) இரண்டாம்


5. ஹைதர் அலி மைசூர் அரியணை ஏறிய ஆண்டு ____________

அ) 1756 ஆ) 1761 இ) 1763 ஈ) 1764

விடை :ஆ) 1761


6. மங்களூர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது

அ) பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் திப்பு சுல்தான்

ஆ) ஹைதர் அலி மற்றும் கள்ளிக்கோட்டை

மன்னர் சாமரின்

இ) ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்

ஈ) திப்பு சுல்தான் மற்றும் மராத்தியர்கள

விடை : இ)ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்


7. மூன்றாம் ஆங்கிலேய – மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர்_____

அ) இராபர் கிளைவ் ஆ) வாரன் ஹேஸ்டிங்ஸ் இ) காரன்வாலிஸ் ஈ) வெல்லெஸ்லி

விடை : இ)காரன்வாலிஸ்


8. ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர்__________

அ) இரண்டாம் பாஜிராவ் 

ஆ) தெளலத்ராவ் சிந்தியா 

இ) ஷாம்பாஜி போன்ஸ்லே 

ஈ) ஷாயாஜி ராவ் கெய்

விடை : அ) இரண்டாம் பாஜிராவ்


9. மராத்திய பேரரசின் கடைசி பீஷ்வா____

அ) பாலாஜி விஸ்வநாத்

ஆ) இரண்டாம் பாஜிராவ்

இ) பாலாஜி பாஜிராவ்

ஈ) பாஜிராவ்

விடை : ஆ) இரண்டாம் பாஜிராவ்


10. துணைப்படைத் திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய அரசு எது?

அ) அயோத்தி  ஆ) ஹைதராபாத்

இ) உதய்பூர்  ஈ) குவாலியர

விடை : ஆ)ஹைதராபாத்


II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1.  அலிநகர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு _______

விடை : 1757


2. சிராஜ் உத் – தெளலாவின் தலைமை படைத் தளபதி ___________

விடை : மிர் ஜாபர்


3. இரண்டாம் கர்நாடகப் போருக்கான முக்கிய காரணம் ____________

விடை :கர்நாடக மற்றும் ஹைதராபாத் வாரிசுரிமை பிரச்சனை


4. இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்துவதற்காக வாரிசு இழப்புக் கொள்கையை கொண்டு வந்தவர் _____

விடை :டல்ஹெளசி பிரபு


5. திப்பு சுல்தானை இறுதியாக தோற்கடித்தவர் __________


விடை : வெல்லெஸ்சி பிரபு


6. திப்பு சுல்தான் இறப்புக்கு பின் _____ வசம் மைசூர் ஒப்படைக்கப்பட்டது.

விடை : மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார்


7. 1800ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியை நிறுவியவர் ____

விடை : வெல்லெஸ்சி பிரபு


III.பொருத்துக


அய் – லா – சப்பேல் உடன்படிக்கை

முதல் கர்நாடகப் போர்

சால்பை உடன்படிக்கை

முதல் மராத்திய போர்

பாரிசு உடன்படிக்கை

மூன்றாம் கர்நாடகப் போர்

ஸ்ரீரங்கபட்டின உடன்படிக்கை

மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர்

மெட்ராஸ் உடன்படிக்கை

முதல் ஆங்கிலேய மைசூர் போர்


IV. சரியா, தவறா?

1. அலிவர்திகான் மறைவுக்கு பின்னர் சிராஜ்- உத் – தெளலா வங்காளத்தின் அரியணை ஏறினார்

விடை : சரி


2. பிளாசிப் போரில் ஆங்கிலேயப் படையை வழி நடத்தியவர் ஹெக்டர் மன்றோ ஆவார்

விடை : தவறு


3. ஐரோப்பாவில் வெடித்த ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் இரண்டாம் கர்நாடகப் போருக்கு இட்டுச் சென்றது.

விடை : தவறு


4. வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி சர் எலிஜா இம்பே ஆவார்.

விடை : சரி


5. காரன் வாலிஸ் பிரபு காவல் துறையை உருவாக்கினார்.

விடை : சரி


V. கீழ்க்கண்டவைகளுள் சரியாக பொருந்தியுள்ளது எது?

அடையாறு போர் – 1748

ஆம்பூர் போர் – 1754

வந்தவாசிப் போர் – 1760

ஆற்காட்டுப் போர் – 1749

விடை : வந்தவாசிப் போர் – 1760


VI. பின்வரும் வினாக்களுக்கு ஒன்று அல்லது இரண்டு வரிகளில் விடையளி.

1. இருட்டறை துயரச் சம்பவம் பற்றி குறிப்பு வரைக.


  • சிராஜ்-உத்-தெளலாவின் படை வீரர்கள் 146 ஆங்கிலேயர்களை சிறைப்பிடித்து கல்கத்தாவின் வில்லியம் கோட்டையில் காற்று புகாத ஒரு சிறிய இருட்டறையில் ஓர் இரவு முழுவதும் அடைத்து வைத்திருந்தனர்.

  • மறுநாள் காலை அறையை திறந்தபோது அவர்களுள் 123 பேர் மூச்சு திணறி இறந்திருந்தனர். 

  • இது வரலாற்றில் ’இருட்டறை துயரச் சம்பவம்’ என்றழைக்கப்படுகிறது.


2. பிளாசிப் போருக்குபின் ஆங்கிலேயர்கள் பெற்ற சலுகைகள் யாவை?

  • பிளாசிப் போர் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு அடித்தளம் அமைத்தது. 

  • பிளாசிப் போருக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் படிப்படியாக அரசியல் ஆதிக்கம் பெற்றதால் ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தின் வர்த்தகம் விரிவடைந்தது.

  • பிளாசிப் போர் வெற்றி ஆங்கிலேயரது அரசியல் அதிகாரத்தை இந்தியாவில் தொடங்கிவைத்தது மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு அவர்களது ஆதிக்கத்தை நீடிக்கவும் செய்தது. 


3. பக்சார் போருக்கான காரணங்களை குறிப்பிடுக


தஸ்தக் என்றழைக்கப்படும் சுங்கவரி விலக்கு ஆணையை தவறாக பயன்படுத்திய ஆங்கிலேயர் மீது மீர்காசிம் கோபமடைந்து கலகத்தில் ஈடுபட்டார். ஆங்கிலேயரால் தோற்கடிக்கப்பட்ட அவர் அயோத்திக்கு தப்பி ஓடி அடைக்கலம் புகுந்து அங்கு சுஜா-உத்-தெளலா மற்றும் இரண்டாம் ஷா ஆலம் ஆகியோருடன் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு கூட்டமைப்பை உருவாக்கி போரில் இறங்கினார். இதுவே பக்சார் போருக்கு காரணமாக அமைந்தது.


4. முதல் ஆங்கிலேய மைசூர் போருக்கான காரணங்கள் யாவை?


  • ஹைதர் அலியின் வளர்ச்சி, அவர் பிரெஞ்சுக்காரர்களிடம் கொண்டிருந்த நட்புறவு ஆகியன ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் எதிர்ப்புக்கு காரணமாயின.

  • ஹைதர் அலிக்கு எதிராக மராத்தியர்கள், ஹைதராபாத் நிசாம், ஆங்கிலேயர்கள் இணைந்து முக்கூட்டணியை ஏற்படுத்தினர்.

5. மூன்றாம் மராத்திய போரின் விளைவுகள் யாவை?


  • மூன்றாம் மராத்திய போரின் முடிவில் மராத்திய கூட்டமைப்பு கலைக்கப்பட்டது மற்றும் பேஷ்வா பதவி ஒழிக்கப்பட்டது.

  • பேஷ்வா இரண்டாம் பாஜிராவின் பெரும்பாலான பகுதிகள் பம்பாய் மாகாணத்தோடு இணைக்கப்பட்டன.

  • தோற்கடிக்கப்பட்ட போன்ஸ்லே மற்றும் ஹோல்கரின், மராத்திய பகுதிகளான நாக்பூர், இந்தூர் ஆகியவை ஆங்கிலேயர்களால் கையகப்படுத்தப்பட்டன.

  • மராத்தியரின் கடைசி பேஷ்வாவான இரண்டாம் பாஜிராவிற்கு வருடாந்திர ஓய்வூதியம் 8 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.


6. துணைப்படைத் திட்டத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக


துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட முதல் சுதேச அரசு ஹைதராபாத் (1798). அதனைதொடர்ந்து தஞ்சாவூர் (1799), அயோத்தி (1801), பேஷ்வா (1802), போன்ஸ்லே (1803), குவாலியர் (1804), இந்தூர் (1817), ஜெய்பூர், உதய்பூர் மற்றும் ஜோத்பூர் (1818) ஆகிய நாடுகள் துணைப்படைத் திட்டத்தில் கையெழுத்திட்டன.


VII விரிவான விடையளி

1. இரண்டாம் கர்நாடக போர் குறித்து ஒரு கட்டுரை எழுதுக.


இரண்டாம் கர்நாடகப் போர் (1749 - 1754) 

  • கர்நாடகம் மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வாரிசுரிமை பிரச்சனையே இப்போருக்கு முக்கிய காரணமாக அமைந்தது. 

  • கர்நாடக நவாப் பதவிக்கு அன்வாருதீனும், சந்தா சாகிப்பும் உரிமை கோரினர். ஹைதராபாத் நிசாம் பதவிக்கு நாசிர் ஜங்கும் முசாபர் ஜங்–ம் உரிமை கோரினர். தக்காண பகுதியில் பிரெஞ்சுக்காரர்கள் சந்தா சாகிப்பிற்கும், முசாபர் ஜங்–க்கும் உதவி செய்தனர். 

  • ஆங்கிலேயர்கள் அன்வாருதீனுக்கும், நாசிர்ஜங்–கும் உதவினர். 

  • இப்போர் மூலம் இந்தியாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும் எண்ணினர். 

ஆம்பூர் போர் (1749) 

  • ஆகஸ்ட் 3, 1749இல் ஆம்பூரில் நடைபெற்ற போரில் பிரெஞ்சு கவர்னர் டியூப்ளே, சந்தா சாகிப், முசாபர் ஜங் ஆகியோரின் கூட்டுப் படைகளால் கர்நாடக நவாப் அன்வாருதீன் தோற்கடிக்கப்பட்டு, கொல்லப்பட்டார். 

  • அன்வாருதீனின் மகன் முகமது அலி திருச்சிராப்பள்ளிக்கு தப்பி ஓடினார். சந்தாசாகிப்பை பிரெஞ்சுக்காரர்கள் கர்நாடக நவாப் ஆக்கினர். 

  • அதற்கு ஈடாக பாண்டிச்சேரியை சுற்றியுள்ள 80 கிராமங்களை வெகுமதியாக பிரெஞ்சுக்காரர்களுக்கு அவர் வழங்கினார். 

  • தக்காணத்திலும் பிரெஞ்சுக்காரர்களால் நாசிர் ஜங் தோற்கடிக்கப்பட்டு, கொல்லப்பட்டார். 

  • முசாபர் ஜங் ஐதராபாத்தின் நிசாம் ஆனார். 

  • புதிய நிசாம் பிரெஞ்சுக்காரர்களுக்கு போதிய வெகுமதி வழங்கினார். இதன் மூலம் டியூப்ளே–ன் அதிகாரம் உச்ச நிலையை அடைந்தது. 

ஆற்காட்டுப் போர் (1751) 

  • டியூப்ளே, முகமது அலி தஞ்சம் புகுந்த திருச்சி கோட்டையை முற்றுகையிட ஒரு படையை அனுப்பினார். இம்முயற்சியில் சந்தா சாகிப்பும் (கர்நாடக நவாப்) தன்னை பிரெஞ்சுப் படைகளோடு இணைத்துக் கொண்டார். இச்சமயத்தில் ஆற்காட்டை தாக்க இராபர்ட் கிளைவ் கம்பெனியிடம் அனுமதி கோரினார். ஆங்கிலேய கவர்னர் சாண்டர்ஸ், இராபர்ட் கிளைவ்-ன் திட்டத்திற்கு அனுமதி வழங்கினார். 200 ஆங்கில படையினர், 300 இந்திய படை வீரர்களுடன் கிளைவ் ஆற்காட்டை தாக்கி கைப்பற்றினார் . 

  • இத்தோல்வியால் பிரான்சு நாட்டு அரசாங்கம் டியூப்ளே–வை பாரிசுக்கு திரும்ப அழைத்தது. 

பாண்டிச்சேரி உடன்படிக்கை (1755) 

  • டியூப்ளேவைத் தொடர்ந்து பிரெஞ்சு ஆளுநராக பதவியேற்ற கோதேயூ ஆங்கிலேயருடன் பாண்டிச்சேரி உடன்படிக்கையினை செய்து கொண்டார். இதன் படி இரு நாடுகளும் தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது எனவும், போருக்கு முன்னர் இருந்த பகுதிகள் அவரவரிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் எனவும், புதிய கோட்டைகளை கட்டக் கூடாது எனவும் கூறப்பட்டது. 

  • இவ்வுடன்படிக்கை மூலம் ஆங்கிலேயர் மேலும் வலிமை பெற்றனர். 

  • முகமது அலியை கர்நாடக நவாப் ஆக நியமித்ததின் மூலம் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் தங்கள் மேலாண்மையை நிலைநாட்டினர். 

  • ஹைதராபாத்தில் பிரெஞ்சுக்காரர்கள் வலிமையுடன் காணப்பட்டாலும் இப்போர் அவர்கள் தக்காணப் பகுதியில் வலிமை குன்றியவர்கள் என்பதை நிரூபித்தது.



2. நான்காம் ஆங்கிலேய மைசூர் போர் பற்றி எழுதுக

திப்பு சுல்தான் 1792இல் ஸ்ரீரங்கப்பட்டிண உடன்படிக்கையின் மூலம் அவமரியாதை செய்ததை காரன்வாலிஸ் பிரபுவால் மறக்கவில்லை. 

காரணங்கள் 

  • திப்பு சுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராக இம்முறையும் வெளிநாட்டு கூட்டணிக்காக அரேபியா, துருக்கி, ஆப்கானிஸ்தான் மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளுக்கு தன்னுடைய தூதர்களை அனுப்பினார். 

  • அச்சமயத்தில் எகிப்து மீது படையெடுத்த நெப்போலியனுடன் திப்பு தொடர்பு வைத்திருந்தார். 

  • பிரெஞ்சு அலுவலர்கள் ஸ்ரீரங்கப்பட்டிணத்திற்கு வருகை புரிந்து அவர்கள் ஜாக்கோபியன் கழகத்தை நிறுவினார்கள், மேலும் அங்கு சுதந்திர மரம் ஒன்றும் நடப்பட்டது. 

போரின் போக்கு

  • 1799இல் வெல்லெஸ்லி பிரபு திப்புவின் மீது போர் தொடுத்தார். இது குறுகிய காலத்தில் நடந்த, கடுமையான போராக இருந்தது. 

  • திட்டமிட்டபடி மைசூரின் மேற்கே பம்பாய் இராணுவம் தளபதி ஸ்டூவர்ட் தலைமையில் படையெடுத்தது. 

  • திப்பு தன்னுடைய தலைநகரம் ஸ்ரீரங்கப்பட்டிணத்திற்கு பின் வாங்கினார். 

  • 1799 மே 4ஆம் நாள் ஸ்ரீரங்கபட்டிணம் கைப்பற்றப்பட்டது. 

  • திப்பு சுல்தான் வீரதீரமாக போரிட்டாலும் இறுதியில் கொல்லப்பட்டார். இவ்வாறாக நான்காம் மைசூர் போர் முடிவுக்கு வந்தது. மேலும் ஒட்டுமொத்த மைசூரும் ஆங்கிலேயர் முன்பாக சரணடைந்தது. 

போருக்கு பின்னர் மைசூரின் நிலை:

  • கனரா, வயநாடு, கோயமுத்தூர், தாராபுரம் ஆகிய பகுதிகளை ஆங்கிலேயர் இணைத்து கொண்டனர். 

  • மீண்டும் இந்து உயர் குடும்பத்தை சேர்ந்த மூன்றாம் கிருஷ்ண ராஜா உடையார் மைசூர் அரியணை ஏறினார். 

  • திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டைக்கு அனுப்பபட்டனர். 


3. பிரிட்டிஷ் ஆட்சியை விரிவுபடுத்த டல்ஹெளசி பிரபு கொண்டு வந்த கொள்கையை பற்றி விவரி?

டல்ஹெளசி பிரபு இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை உயர்த்துவதில் முதன்மை சிற்பியாக இருந்தார். அவர் ஓர் ஏகாதிபத்தியவாதி ஆவார். ஆங்கிலேய பேரரசை விரிவுபடுத்துவதற்காக அவர் வாரிசு இழப்புக் கொள்கை என்ற புதிய கொள்கையை கொண்டு வந்தார். 1848ஆம் ஆண்டு அவர் அறிவித்த இக்கொள்கையின் படி, சுதேச மன்னர்கள் ஆங்கிலேயரின் அனுமதி இன்றி வாரிசுகளை தத்தெடுக்க நேரிடும் போது, மன்னரின் சொத்துக்கள் தத்தெடுத்த பிள்ளைக்கும், மன்னரின் ஆட்சிப்பகுதி ஆங்கிலேயரின் தலையாய சக்திக்கும் செல்ல நேரிடும் எனப்பட்டது. இக்கொள்கையினை இந்தியர்கள் கடுமையாக எதிர்த்தனர். 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சிக்கு இக்கொள்கை முக்கிய காரணமாக அமைந்தது.

வாரிசு இழப்புக் கொள்கையின் மூலம் டல்ஹெளசி பிரபு இணைத்துக் கொண்ட பகுதிகள் : 

சதாரா (1848), ஜெய்த்பூர், சம்பல்பூர் (1849), பகத் (1850), உதய்பூர் (1852), ஜான்சி (1853) மற்றும் நாக்பூர் (1854)


4. வெல்லெஸ்லி பிரபு எவ்வாறு ஆங்கிலேய ஆதிக்கத்தை இந்தியாவில் விரிவுபடுத்தினார்?

இந்தியாவில் இருந்த சுதேச அரசுகளை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வெல்லெஸ்லி பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே துணைப்படைத்திட்டமாகும். இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை விரிவுபடுத்தவும் அரசியல் ஆதிக்கத்தை ஏற்படுத்தவும் இத்திட்டம் மிகச்சிறந்த கருவியாக பயன்படுத்தப்பட்டது. சுதேச அரசுகள் பாதுகாக்கப்பட்ட அரசுகள் என்றழைக்கப்பட்டது. அவ்வரசுகள் மீது ’தலையாய அதிகாரம்’ செலுத்துபவராக ஆங்கிலேயர் இருந்தனர். படையெடுப்புகளிலிருந்து சுதேச அரசுகளை காப்பதும், உள்நாட்டு அமைதியை நிலைநாட்டுவதும் ஆங்கிலேயரின் கடமை என்ற நிலை உருவானது. 

ஆங்கிலேயருக்கு கிடைத்த நன்மைகள் 

  • ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி, இந்திய சுதேச அரசர்களின் செலவிலேயே தன்னுடைய படையை பராமரித்தது. 

  • சுதேச அரசர்களிடம் பணியில் இருந்த அனைத்து பிரெஞ்சுக்காரர்களும் நீக்கப்பட்டனர். பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவில் மீண்டும் எழுச்சி பெறும் அபாயம் முற்றிலும் நீங்கியது. 

  • கம்பெனி, சுதேச அரசுகளின் வெளியுறவுக் கொள்கையினை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. 

  • வெல்லெஸ்லி பிரபுவின் இந்த இராஜதந்திர முயற்சி ஆங்கிலேயரை இந்தியாவில் தலையாய சக்தியாக மாற்றியது. இவர் ’இந்தியாவில் ஆங்கிலேய பேரரசு’ என்பதை ’இந்தியாவின் ஆங்கிலேய பேரரசு’ என்று மாற்றினார்.

Popular posts from this blog

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

8 அறிவியல்- அன்றாட வாழ்வில் வேதியியல்- வினா-விடைகள்