வகுப்பு 8 ப1 அ3 சமூக அறிவியல் கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் வினா விடைகள்



அலகு 3

 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்


மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. ஜாகீர்தாரி, மல்குஜாரி, பிஸ்வேதாரி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நிலவரி முறை எது? 

அ) மகல்வாரி முறை ஆ) இரயத்துவாரி முறை 

இ) ஜமீன்தாரி முறை ஈ) இவற்றில் எதுவுமில்லை 

விடை: ஈ) இவற்றில் எதுவுமில்லை 

2. எந்த கவர்னர்-ஜெனரலின் காலத்தில், வங்காளத்தில் நிரந்தர நிலவரித் திட்டம் செய்து கொள்ளப்பட்டது? 

அ) ஹேஸ்டிங்ஸ் பிரபு ஆ) காரன்வாலிஸ் பிரபு 

இ) வெல்லெஸ்லி பிரபு ஈ) மிண்டோ பிரபு 

விடை: ஆ) காரன்வாலிஸ் பிரபு


3. மகல்வாரி முறையில் ’மகல்’ என்றால் என்ன? 

அ) வீடு ஆ) நிலம் இ) கிராமம் ஈ) அரண்மனை 

விடை: இ) கிராமம்


4. மகல்வாரி முறை எந்தப் பகுதியில் செய்துகொள்ளப்பட்டது? 

அ) மகாராஷ்டிரா ஆ) மதராஸ் இ) வங்காளம் ஈ) பஞ்சாப் 

விடை: ஈ) பஞ்சாப்


5. கீழ்க்காணும் கவர்னர்களுள் மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? அ) ஹேஸ்டிங்ஸ் பிரபு ஆ) காரன்வாலிஸ் பிரபு 

இ) வெல்லெஸ்லி பிரபு ஈ) வில்லியம் பெண்டிங் பிரபு 

விடை: ஈ) வில்லியம் பெண்டிங் பிரபு


6. ஆங்கிலேயரால் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்படாத பகுதி எது? 

அ) பம்பாய் ஆ) மதராஸ் இ) வங்காளம் ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை: இ) வங்காளம்


7. இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி யாரால் தலைமையேற்று நடத்தப்பட்டது? 

அ) மகாத்மா காந்தி ஆ) கேசப் சந்திர ராய் 

இ) திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ் ஈ) சர்தார் வல்லபாய் பட்டேல் 

விடை: இ) திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ்


8. பர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமையில் நடத்தப்பட்டது? 

அ) சர்தார் வல்லபாய் பட்டேல் ஆ) மகாத்மா காந்தி 

இ) திகம்பர் பிஸ்வாஸ் ஈ) கேசப் சந்திர ராய் 

விடை: அ) சர்தார் வல்லபாய் பட்டேல்


II கோடிட்ட இடங்களை நிரப்புக 

1. ______________என்பது ஜமீன்தார் முறையின் திருத்தப்பட்ட முறையாகும். 

விடை: மகல்வாரி முறை


2. மகல்வாரி முறை ___________என்பவரின் சிந்தனையில் உதித்த திட்டம் ஆகும். 

விடை: ஹோலட் மெகன்சி


3. இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி ___________ல் நடைபெற்றது. 

விடை: வங்காளத்தில்


4. மாப்ளா கலகம் _______________ல் நடைபெற்றது. 

விடை: கேரளாவில்


5. ’சம்பரான் விவசாயச் சட்டம்’ நிறைவேற்றப்பட்ட ஆண்டு __________.

விடை: 1918


III பொருத்துக


நிரந்தர நிலவரி திட்டம்

வங்காளம்

மகல்வாரி முறை

வடமேற்கு மாகாணம்

இரயத்துவாரி முறை

மதராஸ்

நீல் தர்பன்

இண்டிகோ விவசாயிகளின் துயரம்

சந்தால் கலகம்

முதல் விவசாயிகள் கிளர்ச்சி


IV சரியா / தவறா எனக் குறிப்பிடுக 

1. வாரன் ஹேஸ்டிங்ஸ் ஐந்தாண்டு நிலவரி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 

விடை: சரி


2. இரயத்துவாரி முறை, தாமஸ் மன்றோவால் அறிமுகப்படுத்தப்பட்டது.

விடை: சரி


3. குஜராத்தின் யூசுப்ஷாகி என்ற பர்கானாவில் பாப்னா கலகம் ஏற்பட்டது.

விடை: தவறு


4 “பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம்” 1918இல் நிறைவேற்றப்பட்டது.

விடை: தவறு


V பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை (✔) செய்க

1. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று ஜமீன்தாரி முறைப் பற்றிய தவறான கூற்றாகும்.

அ) இந்த முறை 1793இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆ) ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளர் ஆவர்.

இ) விவசாயிகளுக்கு இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட வருவாய் நிலையாக கிடைத்தது.

ஈ)இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 19% நிலப்பரப்பில் நடமுறைப்படுத்தப் பட்டிருந்தது.

விடை: இ) விவசாயிகளுக்கு இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட வருவாய் நிலையாக கிடைத்தது.


2. கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் நடைபெற்ற விவசாய புரட்சி பற்றிய சரியான கூற்று எது?

அ) சந்தால் கலகம் வங்காளத்தில் நடைபெற்றது.

ஆ) நீல் தர்பன் என்ற நாடகம் தீன பந்து மித்ராவால் எழுதப்பட்டது.

இ) தக்காண கலகம் 1873இல் பூனாவில் உள்ள கிராமம் ஒன்றில் துவங்கியது.

ஈ) மாப்ளா கலகம் தமிழகத்தில் நடைபெற்றது.

விடை: ஆ) நீல் தர்பன் என்ற நாடகம் தீன பந்து மித்ராவால் எழுதப்பட்டது.


VI பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி

1. நிரந்தர நிலவரி திட்டத்தின் சிறப்புக்கூறுகள் ஏதேனும் இரண்டினை குறிப்பிடுக.

❋ ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு முறையாக வரி செலுத்தும் வரை ஜமீன்தார்கள் நில உடைமையாளர்களாக அங்கீகரிக்கப்பட்டனர்.

❋ விவசாயிகளிடமிருந்து வரியை வசூல் செய்யும் அரசின் முகவர்களாக ஜமீன்தார்கள் செயல்பட்டனர்.


2. இரயத்துவாரி முறையின் சிறப்புக் கூறுகள் யாவை?

❋ வருவாய் ஒப்பந்தம் நேரடியாக விவசாயிகளுடன் செய்துகொள்ளப்பட்டது.

❋ நில அளவு மற்றும் விளைச்சலின் மதிப்பீடு கணக்கிடப்பட்டது.


3. மகல்வாரி முறையின் விளைவுகளைக் கூறுக.

❋கிராமத் தலைவர், சலுகைகளை தமது சொந்த விருப்பங்களின் அடிப்படையில்

தவறாகப் பயன்படுத்தினார்.

❋இம்முறையானது விவசாயிகளுக்கு இலாபகரமானதாக இல்லை.

❋இம்முறையானது ஜமீன்தாரி முறையின் திருத்தியமைக்கப்பட்ட வடிவமாக

இருந்தது.


4. 1859-60இல் நடைபெற்ற இண்டிகோ (அவுரி) கலகத்திற்கு காரணம் என்ன?

❋ ஐரோப்பிய இண்டிகோ தோட்டக்காரர்கள், விவசாயிகளுக்கு மிகவும் தீமை தரும் வகையில் இண்டிகோவை வளர்ப்பதற்கு குத்தகை விவசாயிகளை கட்டாயப்படுத்தினர்.

❋ குத்தகை விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் அவுரியை தங்களுக்கு குறைந்த விலைக்கு விற்கும்படியும், குத்தகை முன்பணத்தை பின்னாளில் அவர்களுக்கு பயன்படும் வகையில் முன்கூட்டியே பெற்று கொள்ளும்படியும் வற்புறுத்தப்பட்டனர்.

இதுவே, இண்டிகோ (அவுரி) கலகத்திற்கு காரணமாக அமைந்தது.


5. சம்பரான் சத்தியாகிரகத்தில் மகாத்மா காந்தியின் பங்கினை குறிப்பிடுக?

பீகார் மாநிலத்தில் உள்ள சம்பரான் என்ற இடத்தில் ஐரோப்பிய பண்ணையாளர்கள் சட்டத்திற்குப் புறம்பான மற்றும் மனிதத் தன்மையற்ற முறைகளில் விவசாயிகளை நடத்தினர்.

விவசாயிகளின் பிரச்சினையை அறிந்து கொண்ட மகாத்மா காந்தி அவர்களுக்கு உதவ முன்வந்தார். அரசு ஒரு விசாரணைக் குழுவை அமைத்து, மகாத்மா காந்தியை அக்குழுவின் ஓர் உறுப்பினராக சேர்த்துக் கொண்டது. விவசாயிகளின் குறைகள் விசாரிக்கப்பட்டு இறுதியில், மே, 1918இல் “சம்பரான் விவசாயச் சட்டம்” நிறைவேற்றப்பட்டது.  


6. பர்தோலி சத்தியாகிரகத்தில் வல்லபாய் பட்டேலின் பங்கு பற்றி எழுதுக.

1928இல் 30 சதவீதம் அளவிற்கு அரசு நிலவருவாயை உயர்த்தியது அதனால், பர்தோலி (குஜராத்) விவசாயிகள் சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையில் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். மேலும் விவசாயிகள், உயர்த்தப்பட்ட நிலவரியை செலுத்த மறுப்பு தெரிவித்து பிப்ரவரி 12, 1928இல் வரிகொடா இயக்கத்தைத் தொடங்கினர். இதில் பல பெண்களும் கலந்து கொண்டனர்.


VII விரிவான விடையளி

1. நிலையான நிலவரி திட்டத்தின் நிறை, குறைகளை விவாதிக்க.

வசூலிக்கும் உரிமையை பத்தாண்டு நில வருவாய் திட்டமாக 1793இல் மாற்றினார். இத்திட்டம் நிலையான நிலவருவாய் திட்டம் என்றழைக்கப்படுகிறது. 

நிறைகள்

  • தரிசு நிலங்கள் மற்றும் காடுகள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டன.

  • ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளராயினர்.

  • நீதி வழங்கும் ப�ொறுப்பிலிருந்து ஜமீன்தார்கள் விடுவிக்கப்பட்டனர்.

  • ஜமீன்தார்கள் ஆங்கில அரசுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக மாறினர்.

  • ஆங்கில அரசுக்கு நிலையான வருவாயை கிடைப்பதை உறுதி செய்தது.

குறைகள்

  • ஆங்கிலேய அரசு விவசாயிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை.

  • விவசாயிகளின் உரிமைகள் மறுக்கப்பட்டதோடு, ஜமீன்தார்களின் ப�ொறுப்பில் விடப்பட்டனர்.

  • விவசாயிகள் பெரும்பாலும் அடிமைகளாகவே நடத்தப்பட்டனர்.

  • இந்த திட்டத்தினால் ஜமீன்தார்கள் சோம்பேறிகளாகவும், ஆடம்பரப் பிரியர்களாகவும் மாறினர்.

  • வங்காளத்தின் பல கிராமப்புறங்களில் ஜமீன்தார்களுக்கும், விவசாயிகளுக்குமிடையே பல மோதல்கள் ஏற்பட்டன



2. ஆங்கிலேயர்களின் நிலவரி திட்டங்கள் இந்திய விவசாயிகள் மீது ஏற்படுத்திய

தாக்கங்கள் என்ன?

விவசாயிகளின் மீது ஆங்கில நிலவருவாய் முறையின் தாக்கங்கள்

❋அனைத்து நிலவரி முறைகளும் பொதுவாக, நிலத்திலிருந்து அதிகபட்ச வருமானம் பெறுவதாகவே இருந்தது. இதனால் நில விற்பனை அதிகரிப்பு மற்றும் விவசாயத் தொழில் அழிவிற்கு வழிவகுத்தது.

❋விவசாயிகள் அதிக வரிவிதிப்பினால் பாதிக்கப்பட்டனர். அதிக வரிச்சுமை மற்றும் பஞ்சத்தினால் மக்கள் வறுமையாலும், கடன்சுமையாலும் அவதிப்பட்டனர்.

❋இதனால் விவசாயிகள் நிலத்தை விலைக்கு வாங்குவோர் மற்றும் வட்டிக்குப் பணம் தருபவர்களை தேடிச் சென்றனர். அவர்கள் விவசாயிகளிடமிருந்த நிலத்தை விலைக்கு வாங்கி பெரும் செல்வந்தர்களாயினர்.

❋ஜமீன்தார்கள், வட்டிக்காரர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர்களால் ஏழை விவசாயிகள் சுரண்டப்பட்டனர்.

❋இந்திய கிராமங்களுக்கான நிலைப்புத் தன்மையும் தொடர்ச்சியான நிலையும் அசைக்கப்பட்டன.

❋ஆங்கிலேய இறக்குமதி பொருட்களால் இந்தியக் குடிசைத் தொழில்கள் மறைந்தன. விவசாயிகள் வருமானத்திற்கு வேறு வழியின்றி தவித்தனர்.  பழமையான பழக்க வழக்கங்கள் மாற்றப்பட்டு புதிய சட்ட அமைப்பு, நீதிமன்ற நடைமுறைகள் வழக்கத்திற்கு வந்தன.

❋நிலத்தின் உண்மையான உரிமையாளர்களாகவும், உற்பத்தியின் பெரும் பங்குதாரர்களாகவும் இருந்த விவசாயிகளுடைய உழைப்பின் பலனானது, ஆங்கிலேயரின் கொள்கையால், ஒரு குறிப்பிட்ட சலுகையை பெற்ற சமுதாயத்திற்கு மட்டுமே நன்மையளிப்பதாக இருந்தது.


3. மாப்ளா கிளர்ச்சி பற்றி ஒரு பத்தியில் எழுதுக. 

மாப்ளா என்று அழைக்கப்பட்ட முஸ்லீம் விவசாயிகள் (கேரளா), இந்து ஜமீன்தார்கள் (ஜென்மிஸ்) மற்றும் ஆங்கில அரசால் அடக்கப்பட்டு, சுரண்டப்பட்டனர். இதுவே இப்புரட்சிக்கு முதன்மை காரணமாக இருந்தது.  ஏப்ரல் 1920இல் நடைபெற்ற மலபார் மாவட்ட மாநாட்டின் மூலம் மாப்ளா விவசாயிகள் உத்வேகம் அடைந்தனர். அம்மாநாடு குத்தகைதாரர்களுக்கு ஆதரவளித்து, நிலக்கிழார் - குத்தகைதாரர் இடையில் உள்ள உறவினை ஒழுங்குப்படுத்த சட்டம் இயற்ற கோரியது. ஆகஸ்ட் 1921இல் மாப்ளா விவசாயிகள், ஜமீன்தார்களின் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கிளர்ச்சியின் ஆரம்பத்தில் மாப்ளா விவசாயிகள் காவல் நிலையங்கள், பொது அலுவலகங்கள், செய்தி தொடர்பு சாதனங்கள்,அடக்கு முறையில் ஈடுபட்ட நிலக்கிழாரின் வீடுகள், வட்டிக்கடைக்காரர்கள் உட்பட அனைவரையும் தாக்கினர். ஆனால் 1921 டிசம்பர் வாக்கில் அரசு இரக்கமின்றி மாப்ளா கிளர்ச்சியை அடக்கியது. அரசின் அதிகாரப்பூர்வ மதிப்பீட்டின்படி, அரசு தலையீட்டின் விளைவாக 2337 மாப்ளா கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். 1650 பேர் காயமடைந்தனர் மற்றும் 45,000க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர்.

 

Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

8 அறிவியல்- அன்றாட வாழ்வில் வேதியியல்- வினா-விடைகள்