வகுப்பு 8 ப1 அ4 மக்கள் புரட்சி வினா விடைகள்

 

அலகு 4

 மக்களின் புரட்சி  

மதிப்பீடு

I.  சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. பாளையக்காரர் முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு

அ) 1519 ஆ) 1520

இ) 1529 ஈ) 1530

விடை: இ) 1529

2. பின்வரும் தமிழ்நாட்டு பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர்

அ) பூலித்தேவன்

ஆ) யூசுப்கான்

இ) கட்டபொம்மன்

ஈ) மருது சகோதரர்கள்

விடை: அ) பூலித்தேவன்

3. காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்?

அ) மதுரை

ஆ) திருநெல்வேலி

இ) இராமநாதபுரம்

ஈ) தூத்துக்குடி

விடை: இ) இராமநாதபுரம்

4. வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ்க்கண்ட எந்த இடத்தில் தூக்கிலிடப்பட்டார்?

அ) பாஞ்சாலங்குறிச்சி ஆ) சிவகங்கை

இ) திருப்பத்தூர் ஈ) கயத்தாறு

விடை:  ஈ) கயத்தாறு

5. வேலு நாச்சியார் எப்பகுதியின் ராணி ஆவார்?

அ) நாகலாபுரம் ஆ) சிவகிரி

இ) சிவகங்கை ஈ) விருப்பாச்சி

விடை: இ) சிவகங்கை

6. ’திருச்சிராப்பள்ளி பிரகடனம்’ யாரால் வெளியிடப்பட்டது?

அ) மருது பாண்டியர்கள்

ஆ) கிருஷ்ணப்ப நாயக்கர்

இ) வேலு நாச்சியார்

ஈ) தீரன் சின்னமலை

விடை: அ) மருது பாண்டியர்கள்

7. கீழ்க்கண்டவைகளுள் தீரன் சின்னமலையோடு தொடர்புடைய பகுதி எது?

அ) திண்டுக்கல் ஆ) நாகலாபுரம்

இ) புதுக்கோட்டை ஈ) ஓடாநிலை

விடை: ஈ) ஓடாநிலை

8. ராணி லட்சுமிபாய் எப்பகுதியில் ஏற்பட்ட புரட்சியை வழிநடத்தினார்?

அ) மத்திய இந்தியா ஆ) டெல்லி

இ) கான்பூர் ஈ) பரெய்லி

விடை: அ) மத்திய இந்தியா


II கோடிட்ட இடங்களை நிரப்புக

1. கிழக்குப்பகுதி பாளையங்கள் ___________கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

விடை: கட்டபொம்மனின் 

2. விஸ்வநாத நாயக்கர் அவரது அமைச்சர் ___________உடன் கலந்தாலோசித்து பாளையக்கார முறையை ஏற்படுத்தினார்.

விடை: அரிய நாதர்

3. கட்டபொம்மனின் முன்னோர்கள் ___________ பகுதியைச் சார்ந்தவர்கள்.

விடை: ஆந்திரா

4. ___________தமிழர்களால் ‘வீர மங்கை’ எனவும் தென்னிந்தியாவின் ஜான்சி ராணி எனவும் அறியப்பட்டார்.

விடை: வேலு நாச்சியார்

5. ___________ ‘சிவகங்கையின் சிங்கம்’ என அழைக்கப்படுகிறார்.

விடை: சின்ன மருது

6. 1857 ஆம் ஆண்டு புரட்சியை___________ என்பவர் 'முதல் இந்திய சுதந்திரப் போர்' என விவரிக்கிறார்.

விடை: வி.டி.சவார்க்கர்


III பொருத்துக


டெல்லி

இரண்டாம் பகதுர்ஷா

கான்பூர்

நானா சாகிப்

ஜான்சி

லட்சுமி பாய்

பரெய்லி

கான் பகதூர் கான்

பீகார்

கன்வர் சிங்



IV சரியா / தவறா எனக் குறிப்பிடுக

1. விஜய நகர ஆட்சியாளர்கள் தங்கள் மாகாணங்களில் நாயக்கர்களை நியமித்தனர்.

விடை: சரி

2. சிவசுப்பிரமணியம் என்பவர் மருது பாண்டியர்களின் அமைச்சர் ஆவார்.

விடை: தவறு

3. 1799 அக்டோபர் 17 ஆம் நாள் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.

விடை: சரி

4. திப்பு சுல்தானின் மூத்த மகன் பதேஹைதர் ஆவார்.

விடை: சரி


V அ) பின்வரும் கூற்றை ஆராய்ந்து சரியான விடையைக் குறிப்பிடவும்

I. வேலூர் புரட்சி 1801ஆம் ஆண்டு ஏற்பட்டது

II. நான்காம் மைசூர் போருக்குப்பின் திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர்.

III. வேலூர் புரட்சியின் போது வில்லியம் பெண்டிங் சென்னையின் ஆளுநராக

இருந்தார்.

IV. ஆங்கிலேயருக்கு எதிரான வேலூர் கலகத்தின் வெற்றி இந்திய வரலாற்றில்

ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும்.

அ) I & II சரி ஆ) II & IV சரி

இ) II & III சரி ஈ) I, II, & IV சரி

விடை: இ) II & III சரி 


ஆ) தவறான இணையைக் கண்டுபிடிக்கவும்

அ) மருது பாண்டியர் - எட்டயபுரம்

ஆ) கோபால நாயக்கர் - திண்டுக்கல்

இ) கேரளவர்மன் - மலபார்

ஈ) துண்டாஜி - மைசூர்

விடை: அ) மருது பாண்டியர் - எட்டயபுரம்


இ) மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி

அ) கட்டபொம்மன் ஆ) ஊமைத்துரை

இ) செவத்தையா ஈ) திப்பு சுல்தான்

விடை: ஈ) திப்பு சுல்தான்


VI பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி

1. பாளையக்காரர்கள் என்பவர் யார்? சிலரின் பெயரைக் கூறுக?

1529இல் விஸ்வனாதர் மதுரை நாயக்கரானார். அவரது மாகாணங்களில் இருந்த சிறுகுடித்தலைவர்களை கட்டுப்படுத்த முடியாத இவர், அமைச்சர் அரிய நாதருடன் கலந்தாலோசித்து 1529-இல் பாளையக்காரர் முறையை ஏற்படுத்தினார். நாடு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொறு பாளையமும் ஒரு பாலையக்காரரின் கீழ் கொண்டுவரப்பட்டது.

வீரபாண்டிய கட்ட பொம்மன்

பூலித்தேவர்


2. பாளையக்கார புரட்சியில் வேலு நாச்சியாரின் பங்கு என்ன?

  • இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட முதல் (இந்தியப்) பெண்ணரசி,சிவகங்கையின் இராணி வேலுநாச்சியார் ஆவார்.

  • ஆங்கிலேயர்களை எதிர்த்து, கப்பம் கட்ட மறுத்து பாளையக்காரர்களுடன் சேர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்டார்.


3. தென்னிந்திய புரட்சியில் பாளையக்கார கூட்டமைப்பின் தலைவர்கள் யாவர்?

பாளையக்காரர்களிடையே இரண்டு பாளையங்கள் (முகாம்கள்) இருந்தன. அவை கிழக்கு பாளையம் (முகாம்), மேற்கு பாளையம் (முகாம்) என்பன ஆகும். 

  • கிழக்கு பாளையங்களில் இருந்த நாயக்கர்கள் கட்டபொம்மனின் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்தனர். 

  • மேற்கு பாளையங்களில் இருந்த மறவர்கள் பூலித்தேவரின் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்தனர்.

4. ’திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின்’ முக்கியத்துவம் யாது?

  • ஜூன் 1801இல் மருது சகோதரர்கள் ’திருச்சிராப்பள்ளி பிரகடனம்’ என்றழைக்கப்பட்ட 'சுதந்திரப் பிரகடனம்' ஒன்றை வெளியிட்டனர். 

  • இது ஆங்கிலேயருக்கு எதிராக இந்தியர்களை ஒன்று சேர்க்கும் முதல் அழைப்பாக இருந்தது.இதன் விளைவாக தமிழ்நாட்டின் பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட ஓர் அணியாக சேர்ந்தனர்.


5. வேலூர் கலகத்தின் விளைவுகளை எழுதுக?

வேலூர் கலகத்தின் விளைவுகள் 

  • புதிய முறைகள் மற்றும் சீருடை ஒழுங்கு முறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. 

  • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திப்புவின் குடும்பத்தினர் வேலூரிலிருந்து கல்கத்தாவிற்கு அனுப்பப்பட்டனர். 

  • வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

6. 1857ஆம் ஆண்டு புரட்சிக்கான உடனடிக் காரணம் என்ன?

  • இராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்டுரக துப்பாக்கியே உடனடிக்காரணமாக இருந்தது. 

  • இந்த வகைத் துப்பாக்கியில் குண்டுகளை நிரப்புவதற்கு முன் அதன் மேலுறையை பற்களால் கடித்து நீக்க வேண்டும். அதன் மேலுறையில் பசுவின் கொழுப்பு மற்றும் பன்றியின் கொழுப்பு தடவப்பட்டிருந்ததால் அதைப் பயன்படுத்த மறுத்து புரட்சியில் ஈடுபட்டனர்.


VII விரிவான விடையளி

1. பூலித்தேவரைப் பற்றி நீவிர் அறிந்ததை எழுதுக?

❋இந்தியாவில் ஆங்கில ஆட்சியை எதிர்ப்பதில் தமிழ்நாட்டில் முன்னோடியாக இருந்தவர் பூலித்தேவர் ஆவார். 

❋திருநெல்வேலியின் அருகிலிருந்த நெற்கட்டும் செவல் என்ற பாளையத்தின் பாளையக்காரர் ஆவார். 

❋தனது ஆட்சிக் காலத்தில் ஆற்காட்டு நவாபான முகமது அலிக்கும் ஆங்கிலேயருக்கும் கப்பம் கட்ட மறுத்து அவர்களை எதிர்க்கத் தொடங்கினார். ❋எனவே ஆற்காட்டு நவாப் மற்றும் ஆங்கிலேயரின் கூட்டுப்படைகள் பூலித்தேவரைத் தாக்கின. 

❋ஆனால் அக்கூட்டுப் படைகள், திருநெல்வேலியில் பூலித்தேவரால் தோற்கடிக்கப்பட்டன. 

❋இந்தியாவில், ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களைத் தோற்கடித்த முதல் இந்திய மன்னர் பூலித்தேவரே ஆவார். 

❋1761இல் ஆற்காடு நவாப்பின் படைகள் நெற்கட்டும்செவ்வலைக் கைப்பற்றியது. ❋பூலித்தேவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து தனது நோக்கம் நிறைவேறாமலேயே இறந்து போனார்.


2. தீரன் சின்னமலைக்கும் ஆங்கிலேயருக்கும் இடையேயான போராட்டத்திற்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளை விவரி?


❋தீரன் சின்னமலை ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகிலுள்ள  மேலப்பாளையத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் தீர்த்தகிரி. 

❋அவர், ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்த கொங்கு நாட்டு பாளையக்காரர் ஆவார். 

❋தீரன் சின்னமலை, பிரெஞ்சு இராணுவத்தின் நவீன போர்முறை பயிற்சிப் பெற்றிருந்தார். இவர் திப்புசுல்தான் பக்கம் இருந்து ஆங்கிலேயருக்கெதிராக போராடி வெற்றிபெற்றார். 

❋திப்புசுல்தான் இறந்த பிறகு, இவர் ஓடாநிலையில் தங்கி ஆங்கிலேயரைத் தொடர்ந்து எதிர்த்துப் போராட, அங்கு ஒரு கோட்டையைக் கட்டினார். 

❋1800இல் கோயம்புத்தூரில் ஆங்கிலேயரைத் தாக்க, அவர் மராத்தியர் மற்றும் மருதுசகோதரர்களின் உதவியைப் பெற முயன்றார்.

❋ஆனால் ஆங்கிலப்படைகள் அக்கூட்டுப்படைகளைத் தடுத்து நிறுத்தியதால்,  தீரன் சின்னமலை மட்டும் கோயம்புத்தூரை தாக்கும் நிலைக்கு உள்ளானார். அதனால் அவரது படை தோற்கடிக்கப்பட்டது. 

❋அவர் ஆங்கில படைகளிடமிருந்து தப்பித்து சின்னமலை காவேரி, ஓடாநிலை மற்றும் அரச்சலூர் போன்ற இடங்களில் நடைபெற்ற போர்களில் கொரில்லா போர் முறையில் ஆங்கிலப் படைகளைத் தோற்கடித்தார். 


3. 1857ஆம் ஆண்டு புரட்சிக்கான காரணங்களை எழுதுக?

புரட்சிக்கான காரணங்கள் 

❋ஆங்கிலேயரின் பொருளாதார ரீதியான சுரண்டல் கொள்கையே, 1857ஆம் ஆண்டு புரட்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது. 

❋வாரிசு இழப்புக் கொள்கை, துணைப்படைத் திட்டம் மற்றும் பல கட்டுப்பாடுகள் ஆகியன மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 

❋கிறித்துவசமயபரப்புகுழுவினரின்மதமாற்ற நடவடிக்கைகள் மக்களால் அச்சத்துடனும் சந்தேகத்துடனும் பார்க்கப்பட்டது. 

❋சதி ஒழிப்பு, பெண்சிசுக்கொலைஒழிப்பு, விதவை மறுமணம் மற்றும் பெண் கல்விக்கான ஆதரவு போன்ற ஆங்கிலேயரின் நடவடிக்கைகள் இந்தியர்களின் கலாச்சாரத்தில் ஐரோப்பியர்கள் தலையிடுவதாக கருதப்பட்டது. 

❋இந்தியசிப்பாய்கள், ஆங்கிலஅதிகாரிகளால் தாழ்வாகவும் அவமரியாதையாகவும் நடத்தப்பட்டனர். ஆங்கில வீரர்களுக்கு மட்டும் அதிக ஊதியம் மற்றும் இராணுவ பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன.


4. 1857ஆம் ஆண்டு புரட்சியின் தோல்விக்கான காரணங்களை எழுதுக.

கலகத்தின் தோல்விக்கு பல நிகழ்வுகள் காரணமாக அமைந்தன.

❋சரியான ஒருங்கிணைப்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு, பொதுவானதிட்டம், மையப்படுத்தப்பட்ட தலைமை, நவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை புரட்சியாளர்களிடையே இல்லை. 

❋கலகத்தில் ஈடுபட்டவர்கள், ஆங்கில படைத்தளபதிகளுக்கு இணையானவர்களாக இல்லை. மேலும் இராணி லட்சுமிபாய், நானாசாகிப் மற்றும் தாந்தியா தோபே ஆகியோர் தைரியமானவர்கள், ஆனால் சிறந்த தளபதிகளாக இல்லை.

❋வங்காளம், பம்பாய், சென்னை, மேற்குபஞ்சாப் மற்றும் இராஜபுதனம் ஆகிய பகுதிகள் புரட்சியில் கலந்து கொள்ளவில்லை. 

❋நவீனக் கல்வி கற்ற இந்தியர்கள் ஆங்கில ஆட்சி மட்டுமே இந்திய சமுதாயத்தை சீர்திருத்தி நவீனப்படுத்த முடியும் என நம்பினர். எனவே அவர்கள் புரட்சியை ஆதரிக்கவில்லை. 

❋சீக்கியர்கள், ஆப்கானியர்கள் மற்றும் கூர்க்கா படைப்பிரிவினர் ஆகியோர்களின் விசுவாசத்தை ஆங்கிலேயர் பெற்றனர். புரட்சியை அடக்குவதில் கூர்க்காப் படையினர் ஆங்கிலேயருக்கு உதவினர். 


Popular posts from this blog

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

8 அறிவியல்- அன்றாட வாழ்வில் வேதியியல்- வினா-விடைகள்