வகுப்பு 8 சஅ கு3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல் வினா விடைகள்

 

அலகு - 3

   சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்>>>


மதிப்பீடு

I சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. சமயச்சார்பின்மை என்பது

அ) அரசு அனைத்து சமயத்திற்கும் எதிரானது

ஆ) அரசு ஒரே ஒரு சமயத்தை மட்டும் ஏற்றுக் கொள்கிறது

இ) எந்த சமயத்தைச் சார்ந்த குடிமகனும் சகிப்புத்தன்மையுடன் அமைதியாக இணக்கமாக வாழ்தல்

ஈ) இவற்றுள் எதுவுமில்லை

விடை: இ) எந்த சமயத்தைச் சார்ந்த குடிமகனும் சகிப்புத்தன்மையுடன் அமைதியாக இணக்கமாக வாழ்தல்


2. இந்தியா ஒரு _____________ கொண்ட நாடாகும்.

அ) பல்வேறு சமயநம்பிக்கை

ஆ) பல்வேறு பண்பாட்டு நம்பிக்கை

இ) (அ) மற்றும் (ஆ) இரண்டும்

ஈ) இவற்றுள் எதுவுமில்லை

விடை: இ) (அ) மற்றும் (ஆ) இரண்டும்


3. இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு

அ) 1951 ஆ) 1976 இ) 1974 ஈ) 1967

விடை: ஆ) 1976


4. பின்வருவனவற்றுள் எது இந்தியாவை சமயச்சார்பற்ற நாடாக விவரிக்கிறது?

அ) அடிப்படை உரிமைகள்

ஆ) அடிப்படை கடமைகள்

இ) அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள்

ஈ) அரசியலமைப்பின் முகவுரை

விடை: ஈ) அரசியலமைப்பின் முகவுரை


5. சமயச் சுதந்திர உரிமை எதனுடன் தொடர்புடையது

அ) நீதித்துறை

ஆ) பாராளுமன்றம்

இ) அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கை

ஈ) அடிப்படை உரிமைகள்

விடை: ஈ) அடிப்படை உரிமைகள்


6. அரசியலமைப்பின் பிரிவு 28 எந்த வகையான கல்வியை அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் தடைசெய்துள்ளது?

அ) சமய போதனைகள்

ஆ) நீதி நெறிக்கல்வி

இ) உடற்கல்வி

ஈ) இவற்றுள் எதுவுமில்லை

விடை: அ) சமய போதனைகள்


7. ஒரு நாடு சமயச்சார்பற்ற நாடாக எப்போது கருதப்படும் எனில் அது

அ) ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளித்தால்

ஆ) அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் சமய போதனைகளைத் தடை செய்தால் 

இ) ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தால்

ஈ) எந்த சமய நம்பிக்கைகளையும் பரப்பு தடை விதித்தால்

விடை: இ) ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தால்


II கோடிட்ட இடங்களை நிரப்புக

1. சமயம் நமக்கு ​​​_______________ போதிக்கவில்லை.

விடை: பகைமையை

2. சமயச்சார்பின்மை ஜனநாயகத்தின் ஒரு பகுதி அது _______________அளிக்கிறது.

விடை: சம உரிமையை

3. _______________என்பது கடவுள் மற்றும் கடவுள்கள் மீது நம்பிக்கையற்றிருப்பதாகும்.

விடை: நாத்திகம்

4. நமது அரசியலமைப்பின் அடிப்படை நோக்கம் _______________ மற்றும்  _______________ ஊக்குவிப்பதாகும்.

விடை: தேசிய ஒற்றுமை, ஒறுமைப்பாடு

5. பிரிவு 15 சமயம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில்  _______________காட்டுவதைத் தடை செய்கிறது.

விடை: பாகுபாடு

III பொருத்துக


நாத்திகம்

கடவுள் நம்பிக்கையற்றிருப்பது

குழந்தைகள்

வருங்கால குடிமக்கள்

தீன் – இலாஹி

தெய்வீக நம்பிக்கை

அரசியலமைப்பு 

1950

ஹோல்யோக்

Secularism என்ற பதத்தை உருவாக்கியவர்

இராஜாராம் மோகன்ராய்

சமூகச் சீர்திருத்தவாதி



IV சரியா / தவறா எனக் குறிப்பிடுக

1. இந்திய நாட்டிற்கென ஒரு சமயம் உள்ளது.

விடை: தவறு

2. சமயச்சார்பின்மை என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டுள்ளது.

விடை: தவறு

3. மொகலாய பேரரசர் அக்பர் சமயச் சகிப்புத்தன்மைக் கொள்கையைப் பின்பற்றினார்.

விடை: சரி

4. சமண சமயம் சீனாவில் தோன்றியது.

விடை: தவறு

5. இந்திய அரசாங்கம் அனைத்துச் சமய விழாக்களுக்கும் விடுமுறையை அறிவிக்கிறது.

விடை: சரி


V சரியான கூற்றைத் தேர்ந்தெடு

1. (i)இந்தியா போன்ற சமயப் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்திற்குச் சமயச்சார்பின்மை விலைமதிப்பற்ற ஒன்றாகும்.

 (ii) சமயச்சார்பற்ற என்ற சொல்லானது 1950ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட

நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை.

 (iii) அரசியலமைப்பு பிரிவு 26 ஒரு குறிப்பிட்ட சமயத்திற்காக வரி செலுத்துவதற்கு

ஊக்கமளிக்கிறது.

(iv) அக்பரின் கல்லறை ஆக்ராவிற்கு அருகிலுள்ள சிக்கந்தராவில் உள்ளது.

அ)i, ii மட்டும் ஆ) ii, iii மட்டும்

இ) iv மட்டும் ஈ) i, ii, iv மட்டும்

விடை: ஈ) i, ii, iv மட்டும்

2. கூற்று : ஒரு வெளிநாட்டவர் இந்தியாவில் தனது சமயத்தைப் பின்பற்றலாம்.

காரணம் : அரசியலமைப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள சமய சுதந்திரம் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டவருக்கும் உண்டு.

(i) கூற்று சரி காரணம் தவறு.

(ii) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

(iii) கூற்று தவறு, காரணம் சரி

(iv) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.

விடை: (ii) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.


3. கூற்று : இந்தியாவில் சமயச்சார்பின்மை என்ற கொள்கை மிக்க மதிப்புள்ளதாகும்

காரணம் : இந்தியா பல்வேறு சமயம் மற்றும் பன்முக கலாச்சாரம் கொண்ட

நாடாகும்.

(i) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது.

(ii) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.

(iii) கூற்று தவறு, காரணம் சரி

(iv) இரண்டும் தவற

விடை: (i) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது.


4. தவறான இணையைத் தேர்க 

(i) தீன் இலாகி – ஒரு புத்தகம்

(ii) கஜுராஹோ - இந்து கோவில்

(iii) அசோகர் - பாறைக் கல்வெட்டு

(iv) இக்பால் - கவிஞர்

விடை: (i) தீன் இலாகி – ஒரு புத்தகம்


VI கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

1. சமயச்சார்பின்மையைப் பரப்பிட பங்களித்த சில இந்தியர்களது பெயர்களைக்

குறிப்பிடுக.

இராஜாராம் மோகன்ராய், சர் சையது அகமதுகான், இரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி மற்றும் பி.ஆர். அம்பேத்கர் போன்றவர்கள் சமயச் சார்பின்மையை நிலை நாட்டப் பாடுபட்டனர்.


2. சமயச்சார்பின்மை என்பது எதனைக் குறிக்கிறது?

சமயச்சார்பின்மை என்பது பிற மதங்களின் மீது சகிப்புத்தன்மையான அணுகுமுறை மற்றும் வெவ்வேறு நம்பிக்கைகளைச் சார்ந்த குடிமக்களுடன் அமைதியாக இணங்கி வாழும் ஒரு மனப்பாங்கு ஆகும்.


3. சமயச்சார்பின்மையின் நோக்கங்களைக் கூறுக

■ ஒரு சமயம் சார்ந்த குழு மற்றொரு சமயக் குழுவின் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பது. 

■ ஒரு சமயத்தைச் சார்ந்த சில உறுப்பினர்கள் அதே சமயத்தைச் சார்ந்த மற்ற உறுப்பினர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பது. 

■ அரசானது எந்த ஒரு குறிப்பிட்ட சமயத்தையும் பின்பற்ற வலியுறுத்தாமல் இருப்பது அல்லது தனி நபர்களின் சமய சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது.


4. அரசிடமிருந்து சமயத்தை பிரிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?

சமயச்சார்பின்மை என்பது அரசையும் மதத்தையும் தனித்தனியாக பிரிக்கும் கோட்பாடு ஆகும். அனைத்து சமய சமூகங்களுடனும் அரசு நடுநிலைத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.


5. சமயச்சார்பற்ற நாட்டின் சிறப்புப் பண்புக் கூறுகள் யாவை?

சமயச்சார்பற்ற நாடு என்பது ஒரு நாடு எந்தவொரு சமயத்தையும் அதிகாரப்பூர்வமாக ஊக்குவிக்காமல் ஒவ்வொரு சமயத்தையும் சமமாக நடத்துதல் என்பதாகும். 

சுதந்திர கோட்பாடு – எந்த சமயத்தையும் பின்பற்ற அரசு அனுமதியளித்தல்.

சமத்துவக் கோட்பாடு – அரசு எந்த ஒரு சமயத்திற்கும் மற்றவற்றிற்கு மேலாக முன்னுரிமை அளிக்காதிருத்தல். 

நடுநிலைமைக் கோட்பாடு - சமய விவகாரங்களில் அரசு நடுநிலைமை கொண்டிருத்தல்.


6. சமயச்சார்பின்மை தொடர்பான இந்திய அரசியலமைப்புப் பிரிவுகள் மூன்றினைக் குறிப்பிடுக

பிரிவு 25 (1) : எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும் பின்பற்றவும் பரப்பவும் உரிமை வழங்குகிறது. 

பிரிவு 26 : சமய விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம். 

பிரிவு 27 : எந்தவொரு குறிப்பிட்ட சமயத்தையும் ஆதரிக்க அரசானது எந்தவொரு குடிமகனையும் வரிசெலுத்துமாறு வற்புறுத்தக் கூடாது.


VII விரிவான விடையளி

1. சமயச்சார்பற்ற கல்வி நமக்கு ஏன் தேவை?

■ குறுகிய மனப்பான்மையைப்போக்குவதற்கும், சக்திவாய்ந்த ஆற்றல் மற்றும் அறிவான நோக்கத்தினை உருவாக்குவதற்கும் 

■ தார்மீக மற்றும் மனிதநேய பார்வையை உருவாக்குவதற்கும் 

■ இளைஞர்களை நல்ல குடிமக்களாக்க பயிற்சியளிப்பதற்கும் 

■ சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் கூட்டுறவு வாழ்க்கை போன்ற மக்களாட்சியின் மதிப்புகளை பலப்படுத்துவதற்கும்

■ வாழ்க்கை குறித்த பரந்த் பார்வையை அளிப்பத்ற்கும்

சமயச்சார்பற்ற கல்வி  தேவைப்படுகிறது.


2. இந்தியா போன்ற நாட்டிற்குச் சமயச்சார்பின்மை அவசியம் – நிரூபிக்கவும்

■இந்தியா சமயச்சார்பற்ற நாடு ஆகும்.

■சமயச்சார்பின்மை சந்தேகத்திற்கிடமின்றி ஒவ்வொரு குடிமகனும் வாழ்க்கையின் மிகச்சிறந்த பேறான சுதந்திரம்,மகிழ்ச்சி ஆகியவற்றை அனுபவிக்க உதவுகிறது.

■சமயச்சார்பின்மை நாகரிகப் பண்புகளுடன் வாழ அனுமதிக்கிறது.

■பிற மக்களின் சமய நம்பிக்கையை மதிக்க வலியுறுத்துகிறது.

■சமயச் சார்பற்ற கொள்கைகளை கொள்கைகளை, அடிப்படை உரிமைகளை அளிக்க உத்திரவாதம் அளிக்கிறது.

எனவே நமது இந்தியா போன்ற நாட்டிற்குச் சமயச்சார்பின்மை அவசியம் என்பதை அறிகிறோம்.


Popular posts from this blog

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

8 அறிவியல்- அன்றாட வாழ்வில் வேதியியல்- வினா-விடைகள்