வகுப்பு 6 அறிவியல் ப3 நீர் பாடப்புத்தக வினா-விடைகள்

 

அலகு 2

நீர்


மதிப்பீடு


I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. உலகில் உள்ள மொத்த நீரில் 97%  ஆகும்.

அ. நன்னீர்

ஆ. தூயநீர்

இ. உப்பு நீர்

ஈ. மாசடைந்த நீர்

விடை: இ. உப்பு நீர்


2. பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?

அ. ஆவியாதல்

ஆ. ஆவி சுருங்குதல்

இ. மழை பொழிதல்

ஈ. காய்ச்சி வடித்தல்

விடை: ஈ. காய்ச்சி வடித்தல்


3. பின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது எது?

I. நீராவிப்போக்கு 

II. மழைபொழிதல்

III. ஆவி சுருங்குதல்

IV. ஆவியாதல்

அ. II மற்றும் III 

ஆ. II மற்றும் IV

இ. I மற்றும் IV 

ஈ. I மற்றும் II

விடை: இ. I மற்றும் IV 



4. நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது?

அ. பனி ஆறுகள்

ஆ. நிலத்தடி நீர்

இ. மற்ற நீர் ஆதாரங்கள்

ஈ. மேற்பரப்பு நீர

விடை: ஆ. நிலத்தடி நீர்


5. வீட்டில் நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில் ..

அ. வெளியேறிய நீரை ஆழ்துளை கிணற்றருகே விட்டு கசிய வைக்கலாம்.

ஆ. அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்.

இ. வெளியேறிய நீரை கொதிக்க வைத்து, பின் குளிர வைத்துப் பருகலாம்.

ஈ. அதில் அதிகமான உயிர் சத்துக்கள் இருப்பதால் அதனை சமையலுக்குப்

பயன்படுத்தலாம்.

விடை: ஆ. அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்.


II. கோடிட்ட இடத்தை நிரப்புக

1. இயற்கையாகக் கிடைக்கும் நீரில் ________​​​ சதவீதம் நீர் மனிதனின் பயன்பாட்டிற்காக உள்ளது.

விடை: 3%


2. நீர் ஆவியாக மாறும் நிகழ்விற்கு _____________என்று பெயர்.

விடை: ஆவியாதல்


3. நீரோட்டம் மற்றும் நீர் விநியோகத்தினை முறைப்படுத்தும் பொருட்டு ஆற்றின் குறுக்கே ___________கட்டப்படுகிறது.

விடை: அணை


4. ஆறுகளில் பாயும் நீரின் அளவு ________காலங்களில் பெருமளவு அதிகமாக இருக்கும்.

விடை: மழை


5. நீர் சுழற்சியினை __________என்றும் அழைக்கலாம்.

விடை: ஹைட்ராலாஜிக்கல் சுழற்சி 


III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்

1. ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் காணப்படும் நீர் மனிதகுலத்தின் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக இல்லை.

விடை: தவறு. ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் காணப்படும் நீர் மனிதகுலத்தின் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக உள்ளது.

2. நீரோட்டம் நிலப்பரப்பை சந்திக்கும் இடம் கடல் ஆகும்.

விடை: தவறு. நீரோட்டம் நிலப்பரப்பை சந்திக்கும் இடம் முகத்துவாரம் ஆகும்.

3. சூரிய வெப்பத்தால் மட்டுமே ஆவியாதல் நிகழும்.

விடை: தவறு. அனைத்து வெப்ப மூலங்களினாலும் ஆவியாதல் நிகழும்.

4. குளிர்வித்தலால் புற்களின் மீது பனி உருவாகும்.

விடை: சரி.

5. கடல் நீரினை நேரடியாகப் பாசனத்திற்குப் பயன்படுத்தலாம்.

விடை: தவறு. கடல் நீரினை நேரடியாகப் பாசனத்திற்குப் பயன்படுத்த முடியாது.


IV. பொருத்துக

1. வெள்ளம் - அதிகளவு மழை 

2. மேற்பரப்பு நீர் - ஏரிகள் 

3. சூரிய ஒளி - ஆவியாதல் 

4. மேகங்கள் - நீராவி 

5. உறைந்த நீர் - துருவங்கள்


V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக

1. இந்த ஆவியானது குளிர்வடைந்து சிறு நீர்த் துளிகளாக ஆகிறது.

2. நீர்த் துளிகள் ஒன்றாக இணைந்து பெரிய நீர்த்துளிகள் ஆகிறது.

3. சூரியனின் வெப்பமானது புவி மீதும், பெருங்கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் பிற நீர் நிலைகளின் மீதும் செயல்பட்டு  நீராவியாகிறது.

4. பெரிய நீர்த்துளிகளின் எடை அதிகமாவதால், காற்றால் அந்த நீர்த்துளிகளை சுமந்து செல்ல இயலாமல் மழையாகப் பொழிகிறது.

5. மரங்களில் உள்ள இலைகளின் மூலம் நீராவிப்போக்கு நடைபெற்று வளிமண்டலத்தினுள் நீராவியாகச் சேர்கிறது.

6. மேகங்களைச் சுமந்த வெப்பக் காற்று மேலே போகிறது.

7. வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காற்று குளிர்வாக இருக்கும்

8. தூசுப் பொருள்களுடன் இணைந்து மிதக்கும் இந்த நீர்த் திவலைகள் இணைந்து மேகங்களாக உருவாக்கும்.

விடை: 

  1. சூரியனின் வெப்பமானது புவி மீதும், பெருங்கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் பிற நீர் நிலைகளின் மீதும் செயல்பட்டு  நீராவியாகிறது.

  2. மரங்களில் உள்ள இலைகளின் மூலம் நீராவிப்போக்கு நடைபெற்று வளிமண்டலத்தினுள் நீராவியாகச் சேர்கிறது.

  3. தூசுப் பொருள்களுடன் இணைந்து மிதக்கும் இந்த நீர்த் திவலைகள் இணைந்து மேகங்களாக உருவாக்கும்.

  4. மேகங்களைச் சுமந்த வெப்பக் காற்று மேலே போகிறது.

  5. வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காற்று குளிர்வாக இருக்கும் இந்த ஆவியானது குளிர்வடைந்து சிறு நீர்த் துளிகளாக ஆகிறது.

  6. நீர்த் துளிகள் ஒன்றாக இணைந்து பெரிய நீர்த்துளிகள் ஆகிறது.

  7. பெரிய நீர்த்துளிகளின் எடை அதிகமாவதால், காற்றால் அந்த நீர்த்துளிகளை சுமந்து செல்ல இயலாமல் மழையாகப் பொழிகிறது.


VI. ஒப்புமை தருக

1. மக்கள் தொகைப் பெருக்கம் : நீர் பற்றாக்குறை :: மறு சுழற்சி :

விடை: நீர் மேலாண்மை

2. நிலத்தடி நீர் : __________ :: மேற்பரப்பு நீர் : ஏரிகள்

விடை: கிணறு


VII. மிகக் குறுகிய விடையளி

1. ஏதேனும் நான்கு நீர் மூலங்களைக் குறிப்பிடவும்.

ஆறு, ஏரி,குளம், கடல்.


2. நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள மக்களின் பல்வேறு தேவைகளுக்கான நீர் எவ்வாறு பெறப்படுகிறது?

கிணறுகள், கால்வாய்கள், நீர்த்தேக்கங்கள், குளங்கள், ஆறுகள், நீர்த்தொட்டிகள், ஆழ்துளைக் கிணறுகள் போன்றவை கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்குகின்றன.


3. குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிரூட்டப்பட்ட ஒரு முகவை நீரினை வெளியே எடுத்து ஒரு மேசையில் வைக்கவும். சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த பாட்டிலைச் சுற்றி குளம்போல் நீர் தேங்கியிருக்கும் ஏன்?

குளிர்ந்த நீரைக் கொண்ட பாட்டிலானது அதனைச் சுற்றியுள்ள காற்றினை குளிரச் செய்கிறது. அதன்மூலம் காற்றிலுள்ள நீராவி சுருங்கி குவளையின் வெளிப்பகுதியில் நீர்திவலைகளை உருவாக்குகிறது. இதனால் பாட்டிலைச் சுற்றி நீர் தேங்கியிருக்கும்.


4. அன்றாடம் நாம் மேகங்களைக் காண்கிறோம். ஆனால், மழை பொழிவு

அன்றாடம் நிகழ்வதில்லை. ஏன்?

  • மழைப் பொழிவு நிகழ குளிர்ச்சியான காற்று தேவை.

  • மேகங்களைச் சுற்றியுள்ள காற்றானது குளிர்ச்சியடையும்போது மட்டுமே நீர் மழையாகப் பொழிகின்றது.

5. நீர் பனிக்கட்டியாகக் காணப்படும் இடங்கள் யாவை?

உயரமான மலைகளிலும், பனிப்பாறைகளிலும், துருவப்பிரதேசங்களிலும் நீர் பனிக்கட்டியாகக் காணப்படுகின்றன. 


6. ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் பகுதியில் உள்ள நீர்வாழ் விலங்குகள் எவ்வாறு உயிர் வாழ்கின்றன?

  • ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் பகுதிகளில் நீரின் மேற்பரப்பு மட்டுமே குளிர்ச்சியடைந்து பனியாக மாறி, திண்மநிலை பனிப் படலங்கள் உருவாகின்றன. 

  • இந்த மிதக்கும் பனிப்படலமானது ஒரு பாதுகாப்புப் படலமாக செயல்பட்டு நீரிலிருந்து வெப்பம் வெளியேறுவதனைத் தடுக்கிறது. 

  • இதன் காரணமாக அடிப்பரப்பில் உள்ள நீர் திரவ நிலையிலேயே இருப்பதால், நீர்வாழ் விலங்குகள் உயிர்வாழ்கின்றன.


7. மழைநீர் சேகரிப்பின் வகைகள் யாவை?

மழைநீர் சேகரிப்பில் இரண்டு முறைகள் காணப்படுகின்றன. 

  • மழை எங்கு பொழிகிறதோ அவ்விடத்திலேயே சேகரித்தல்.

  • ஓடும் மழைநீரினை சேகரித்தல் 


VIII. குறுகிய விடையளி

1. மேற்பரப்பு நீரினை நிலத்தடி நீரிலிருந்து வேறுபடுத்தவும்.


மேற்பரப்பு நீர்

நிலத்தடி நீர்

புவியின் மேற்பரப்பில் காணப்படும் நீர் மேற்பரப்பு நீர் எனப்படும்

புவிப்பரப்பின் கீழே மண்ணில் நிறைந்திருக்கும் அல்லது மண்ணில் செறிந்திருக்கும் நீர் நிலத்தடி நீர் எனப்படும

மூலங்கள்:ஆறு, ஏரி, நன்னீர், சதுப்புநில நீர்

மூலங்கள்:நீரூற்றுகள், கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், அடிகுழாய்கள்

மொத்த நன்னீரில் மேற்பரப்பு நீர் 0.3% உள்ளது.

மொத்த நன்னீரில் நிலத்தடி நீர் 30.1% உள்ளது.


2. “நீர் சேமிப்பு” என்ற தலைப்பில் சில வாசகங்களை உமது நடையில் எழுதவும்.

  • உயிரினங்களின் ஆதாரம் நீர்

  • அனைத்துயிர்களும் உயிர் வாழ வேண்டும் நீர்

  • நீர் சேமிப்பு நாட்டை உயர்த்தும்

  • மரம் வளர்த்து மழை பெறலாம்


3. புவியின் பரப்பில் சுமார் 71% நீர் நிறைந்துள்ளது எனில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது சாத்தியமா? காரணம் கூறுக.

  • புவிப்பரப்பில் 71% நீர் நிறைந்திருந்தாலும் அதில் நன்னீரின் அளவு வெறும் 3% மட்டுமே.

  • உயிரிங்கள் நன்னீரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் இந்த 3% போதுமானதாக இல்லை.

  • அதிகரிக்கும் மக்கள் தொகை,குறைவான மழைப் பொழிவு,குறைந்து கொண்டு வரும் நிலத்தடி நீர் மட்டம் போன்ற காரணங்களால் நன்னீர் கிடைக்கும் அளவும் குறைந்து கொண்டு வருவதால் நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.



4. கழிவு நீரை ஆறுகளிலோ, கடலிலோ சமன்படுத்தாமல் வெளியேற்றக் கூடாது. இக்கூற்றிக்குத் தகுந்த விளக்கம் அளிக்கவும்.

கழிவு நீர்  மாசடைந்த நீர் என்பதால் அதை நேரடியாக ஆருகளிலோ, கடலிலோ கலந்துவிட அனுமதிக்கக் கூடாது.

மேலும், கழிவு நீர் அமிலத்தன்மை அல்லது காரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்பதால் அதில் உயிரிங்கள் உயிர் வாழ முடியாது.

எனவே, கழிவு நீரை ஆறுகளிலோ கடலிலோ சமன்படுத்தாமல் வெளியேற்றினால் நீர் வாழ் உயிரிங்கள் அழிந்து விடும் அபாயம் உள்ளது.


5.இந்தியாவில் நீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணங்களை தெளிவுப்படுத்தவும்.


நீர்ப் பற்றாக்குறைக்கான முதன்மையான காரணங்கள் 

1. மக்கள் தொகைப் பெருக்கம் 

2. சீரான மழை பொழிவின்மை 

3. நிலத்தடி நீர்மட்டம் குறைதல் 

4. நீர் மாசுபடுதல் 

5. நீரினை கவனக்குறைவாக கையாளுதல்


IX. விரிவான விடையளி

1. குடிநீர் என்பது யாது? அதன் பண்புகளைப் பட்டியலிடவும்.

மனித நுகர்வுக்குத் தகுதியான நீரே குடிநீர் எனப்படும்.

குடிப்பதற்கு உகந்த நீரின் பண்புகள்:

  • குடிநீர் நிறமற்றதாகவும், மணமற்றதாகவும், தெளிந்த நிலையிலும் இருக்க வேண்டும். 

  • பாக்டிரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிர்கள் அற்றதாக இருத்தல் வேண்டும். 

  • நமது உடலுக்குத் தேவையான உப்புகள் மற்றும் தாதுக்களைக் கொண்டிருக்க வேண்டும்.


2. இந்தியாவின் நீர் மனிதன் யார்? இணையத்தின் உதவியுடன் அவர் உருவாக்கிய நீர் மேலாண்மைத் திட்டங்கள் பற்றியும், அவர் பெற்ற விருதுகள் பற்றியும் ஒரு குறிப்பினை எழுதவும்.

  • திரு. இராஜேந்திரசிங் (ஜல் ப்ருஷ்) நீர் மனிதர் என்று அழைக்கப்படுகிறார்.

  • நமது நாட்டில் சுமார் 350 கிராமங்களீல் தடுப்பணைகளையும், நீர் சேகரிக்க குளங்களையும், மழை நீர் சேமிப்பு திட்டத்தின் கீழ் கட்டியுள்ளார்.

  • இவரது முயற்சியால் பல ஆறுகளும், குளங்களும் புத்துயிர் பெற்றுள்ளன.

  • இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவற்றுள் சில…

  • ராமன் மகசேசே விருது.

  • ஸ்டாக்ஹோம் நீர் மேலாண்மை விருது

  • ஜம்னலால் பஜாஜ் விருது



3. மழை நீர் சேகரிப்பு என்றால் என்ன? வீடுகளில் மழைநீர் சேகரிப்பு எவ்வாறு நிகழ்கிறது என்பதனை சில வாக்கியங்களில் குறிப்பிடவும்.

மழைநீரினை நேரடியாகச் சேகரித்தல் மற்றும் பயன்படுத்துதலே மழைநீர் சேகரிப்பு எனப்படும். 

மழைநீர் சேகரிப்பில் இரண்டு முறைகள் காணப்படுகின்றன. 

அ. மழை எங்கு பொழிகிறதோ அவ்விடத்திலேயே சேகரித்தல். உதாரணமாக கட்டிடங்களின் மேல்தளத்திலிருந்து வரும் மழை நீரினை சேகரித்தல். 

ஆ. ஓடும் மழைநீரினை சேகரித்தல் உதாரணமாக மழைநீர் அதிகம் பாய்ந்து வரும் பகுதிகளில் நீர்த்தேக்கங்கள் அமைத்து சேகரித்தல்.


X. உயர் சிந்தனைத்திறன் வினாக்களுக்கு விடையளி

1. ஒரு நிலப்பகுதியில் ஏரியோ, குளமோ காணப்படவில்லை. அப்பகுதியில்

மேகங்கள் உருவாதல் நிகழுமா?

ஏரி, குளம் இவை மட்டுமே மேகங்கள் உருவாகக் காரணங்கள் இல்லை.

வேறு ஏதேனும் நீர் நிலைகளோ அல்லது அதிக அளவில் மரங்கள் சூழ்ந்த நிலப்பகுதிகள், மலைகள் போன்றவைகளோ இருந்தாலும் மேகங்கள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன.


2. புவியில் 3% மட்டுமே நன்னீர் உள்ளது. அதனை அதிகப்படுத்த முடியாது. இந்தச் சூழ்நிலையில் இருக்கும் நன்னீரினை எவ்வாறு தக்க வைத்துக் கொள்ளலாம்?

  • நீரை சிக்கனமாகவும், தேவைக்கு மட்டும் அளவாகப் பயன்படுத்த வேண்டும்.

  • மழை நீரின் சேமிப்பை அதிகரித்து, மழை நீர் சிறிதும் வீணாகாமல் பாதுகாக்க வேண்டும்.

  • நீர் நிலைகளில் மாசடைந்த நீர் கலக்காமல் பாதுகாக்க வேண்டும்.

Popular posts from this blog

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

8 அறிவியல்- அன்றாட வாழ்வில் வேதியியல்- வினா-விடைகள்